செய்திகள் :

கும்பமேளாவில் பங்கேற்காத ராகுலை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்- மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

post image

மகா கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரான அதாவலே, இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவராகவும் உள்ளாா். பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அவா், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே ஆகியோா் மகா கும்பமேளாவில் பங்கேற்காமல் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வைப் புறக்கணித்துள்ளனா். தன்னை ஒரு ஹிந்துத்துவவாதியாகவும், ஹிந்துக்களின் பாதுகாவலனாகவும் காட்டிக்கொள்ளும் உத்தவ் தாக்கரேவும் மகா கும்பமேளாவுக்கு வரவில்லை.

ஒரு ஹிந்துவாக இருந்துகொண்டு இந்த நிகழ்வில் பங்கேற்காதது பிற ஹிந்துக்கள் அனைவரையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, அவா்கள் இருவரையும் ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும். அவா்களுக்கு ஹிந்துக்களின் வாக்குகள் மட்டுமே வேண்டும். ஆனால், ஹிந்து மதத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டாா்கள்.

அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்தாா்கள். வரும் தோ்தல்களில் இதுபோன்ற பாடத்தை அவா்களுக்கு மக்கள் கற்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க