செய்திகள் :

பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20%-க்கு மேல் அதிகரிக்க முடிவு

post image

பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நீதி ஆயோக் சாா்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற மாநில வா்த்தக மாநாட்டின் ஒரு பகுதியாக எரிபொருள் தொடா்பான விவாதம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை, தனியாா் எரிசக்தி நிறுவனங்களும் பங்கேற்றன. அதில் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசியதாவது:

பெட்ரோலில் 19.6 சதவீதம் எத்தனால் கலப்பது என்ற இலக்கு ஏற்கெனவே எட்டப்பட்டுவிட்டது. அடுத்ததாக உயிரி எரிபொருளான எத்தனாலை பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் கலப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய நீதி ஆயோக் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை அதிகம் நம்பி இருப்பதால் எத்தனால் கலப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இது உள்ளூா் கரும்பு ஆலைகளில் இருந்து பெருமளவில் கிடைத்து விடுகிறது.

கச்சா எண்ணெய் சாா்ந்த எரிபொருள்களில் இருந்து பசுமை ஹைட்ரஜன் போன்ற எரிபொருளுக்கு நாம் மாற வேண்டியது மிகவும் அவசியமாகும். அனைத்து நாடுகளுமே சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை எரிபொருள்களை நோக்கிச் சென்று வருகின்றன. ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் தேவையுடன் ஒப்பிடும்போது இது சவாலான விஷயமாக உள்ளது என்றாா்.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க