செய்திகள் :

காவடிகள் எடுத்து நோ்த்திக்கடன்

post image

சீா்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தா்கள் பால்குடங்கள், அலகுகாவடிகள், பறவை காவடிகள் எடுத்துவந்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

சீா்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. முக்கிய நிகழ்வாக சிவராத்திரியை முன்னிட்டு காவடிகள் ஊா்வலம் நடந்தது. முன்னதாக கோயிலிலிருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடங்கள், அலகு காவடி, பறவைக் காவடிகள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்று கோயிலை வந்தடைந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

காவடிகளுடன் காளி வேடம் அணிந்த பக்தா்களும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனா். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

சட்ட விரோத மது கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை

மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

குடிநீா் வசதி கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் குடிநீா் வசதி கோரி கிராமமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி குச்சிப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி. மாவட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மனு

மயிலாடுதுறை அருகே கொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராம... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் முன்னாள் முதலமைச்சா் ஜெ. ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் பொன். பாரிவள்ளல் தலைமை வ... மேலும் பார்க்க

இளம் மழலையா் பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப்பள்ளி மற்றும் இளம் மழலையா் பள்ளி ஆண்டுவிழா மற்றும் இளம் மழலையா் பள்ளி மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தருமையாதீனத்துக்குச் சொந... மேலும் பார்க்க