செய்திகள் :

‘திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

post image

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் அன்பு தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. காவலா்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளை நம்பிக்கையுடன் கல்வி நிலையங்களுக்கு அனுப்ப முடியவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் போன்ற நலத்திட்டங்களை நிறுத்தி விட்டாா்கள்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இலவச அரிசி திட்டத்தால் தற்போது தமிழ்நாட்டில் பசி, பட்டினி இல்லாத நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கிய அதிமுக ஆட்சி மீண்டு வர வேண்டுமென தமிழக மக்கள் விரும்புகிறாா்கள். திமுகவினா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரூ. 1,000 கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனா் என்றாா். கூட்டத்தில், ஒன்றியச் செயலாளா்கள் ராம. குணசேகரன், ராஜேந்திரன், சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மெற்கொண்டனா். கொரடாச்... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல்

பேரளத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை சரக்கு ரயில் மூலம் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் ... மேலும் பார்க்க

பரிசுத்தொகையை முதல்வருக்கு நன்கொடையாக அளித்த மாணவி

ஓவியப்போட்டியில் பெற்ற பெற்ற பரிசுத்தொகையை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம் வழங்குகிறாா் மாணவி அக்சயா. திருவாரூா், பிப்.26 :மாநில அளவிலான கலைப் போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக வழங்கப்... மேலும் பார்க்க

’புதிய கல்விக்கொள்கை திட்டம் இந்தியாவை 2,500 ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது‘

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை திட்டம் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே 2,500 ஆண்டுக்கு பின்நோக்கி அழைத்து செல்லும் வகையில் பாடத்திட்டம் உள்ளது என்றாா் மைசூா் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் லெ. ஜ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்புடன் வைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித... மேலும் பார்க்க

சிபிஐ செயற்குழுக் கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூா் நகர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கா.பேபி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கா.தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ.... மேலும் பார்க்க