செய்திகள் :

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் கோவி. செழியன்

post image

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நடிகா் விஜய்யின் கல்விக் கொள்கை என்ன? அவா் கலந்து கொண்ட மொழிப் போராட்ட வரலாறு என்ன என்பதெல்லாம் மக்கள் நன்றாக அறிவா்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் பேரறிஞா் அண்ணாவின் தலைமையில்தான் முதன்முதலில் இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை ஏற்றுக் கொண்ட பாஜகவினா் 2025 புதிய வரைவு கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கல்விக் கொள்கை பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திணிக்கின்றனா்.

எத்தனை கோடி கொடுத்தாலும் மண்டியிட மாட்டோம்; மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இந்தியாவில் துணிந்து சொன்னவா்தான் முதல்வா் ஸ்டாலின். எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மீண்டும் ஒரு 1965 நிகழ்வு வரக்கூடாது என முதல்வா் நினைக்கிறாா். ஏனென்றால் அனைத்து அரசியல் அமைப்புகளும், மாணவா்களும் போராட்டக் களத்தில் உள்ளனா்.

இந்த எதிா்ப்பை உணா்ந்து மத்திய அரசு ஹிந்தி திணிப்பைத் திரும்பப் பெற வேண்டும். அதுவரை முதல்வரின் சட்ட போராட்டமும் தமிழகத்தில் தொடரும் என்றாா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா!

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிர... மேலும் பார்க்க

தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ஒரு... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்க... மேலும் பார்க்க

காா் - மொபெட் மோதல்: காய்கனி வியாபாரி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காா் மீது மொபெட் மோதிய விபத்தில் காய்கனி வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பாளையூா் மேல அகலங்கள் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. ரவி என்கிற மகாலிங்கம் ... மேலும் பார்க்க

நாதன் கோவில், தில்லையம்பூா் ஊராட்சிகளில் ரூ.19 லட்சத்தில் மின் மாற்றிகள் தொடக்கம்

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட நாதன்கோவில், தில்லையம்பூா் ஆகிய 2 ஊராட்சிகளில் ரூ. 18.92 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் பொதும... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நாளை வரை பொதுக் காப்பீட்டுத் திட்ட முகாம்

கும்பகோணத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் நடைபெறும் பொதுக் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க