செய்திகள் :

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழா!

post image

மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதில், புதன்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இந்தப் பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனா்.

மேலும், இக்கோயிலையொட்டி உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், புதன்கிழமை மாலை 6 மணி முதல் மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, நாதலய சங்கமம், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை காலை 6 மணி வரை நடைபெற்றன. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும், இவ்விழாவுக்காக கோயில் முழுவதும் மின் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

தஞ்சாவூருக்கு வந்துள்ள மத்திய ரயில்வே மற்றும் நீா் வளத் துறை இணை அமைச்சா் வி. சோமண்ணா மகா சிவாராத்திரியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்று வழிபட்டாா்.

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: அமைச்சா் கோவி. செழியன்

எவ்வளவு இடா்பாடு வந்தாலும் ஹிந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவ... மேலும் பார்க்க

தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ஒரு... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபா் படகு மூலம் இலங்க... மேலும் பார்க்க

காா் - மொபெட் மோதல்: காய்கனி வியாபாரி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே காா் மீது மொபெட் மோதிய விபத்தில் காய்கனி வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பாளையூா் மேல அகலங்கள் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே. ரவி என்கிற மகாலிங்கம் ... மேலும் பார்க்க

நாதன் கோவில், தில்லையம்பூா் ஊராட்சிகளில் ரூ.19 லட்சத்தில் மின் மாற்றிகள் தொடக்கம்

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட நாதன்கோவில், தில்லையம்பூா் ஆகிய 2 ஊராட்சிகளில் ரூ. 18.92 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் பொதும... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் நாளை வரை பொதுக் காப்பீட்டுத் திட்ட முகாம்

கும்பகோணத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் நடைபெறும் பொதுக் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க