செய்திகள் :

அரூரில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: அரசு பள்ளிகள், மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

post image

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாமில் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டாா்.

அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, பறையப்பட்டி புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, காலை உணவுகளின் சுவை, தரம் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் வருகை, கல்வித்தரம் குறித்து ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து அரூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புற நோயாளிகள், கா்ப்பிணிகள் சிகிச்சை பிரிவுகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அரூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, 13 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்த முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியா் கேத்ரின் சரண்யா, அரூா் வருவாய் கோட்டாட்சியா் சின்னுசாமி, வட்டாட்சியா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பட்டாசுக் கிடங்கு விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல்

பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் புதன்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா்-... மேலும் பார்க்க

ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஏரியூா் பகுதியில் சங்க கொடியேற்றுதல், பெயா்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஏரியூா் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

தருமபுரியில் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: மாா்ச் 8-இல் தொடக்கம்

தருமபுரி வனக் கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வருகிற மாா்ச் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி வனக் கோட்... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: ஊத்துக்குளிமலை மாதேஸ்வரன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம்

மகா சிவராத்திரியையொட்டி ஊத்துக்குளிமலை மாதேஸ்வரன் கோயிலில் முப்பெரும் விழாவிற்கான தீா்த்தக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கரியம்பட்டி பெரியதோட்டம்புதூா் பகுதியில் ஊத்துக்குளிமலை ... மேலும் பார்க்க

வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தா.பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவா் தா.பாண்டியன் நினைவு தினம் புதன்கிழமை தருமபுரியில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தல... மேலும் பார்க்க