செய்திகள் :

எம்ஹெச்370 விமானம்: மீண்டும் தொடங்கிய தேடுதல் வேட்டை

post image

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தேடும் பணிகள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி லோக் கூறியதாவது:

கடலுக்குள் மாயாமாகியுள்ள மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணியை ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தொடங்கியுள்ளது. இது தொடா்பாக அந்த நிறுவனத்துக்கும் மலேசிய அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னும் இறுதிவடிவை எட்டவில்லை. இருந்தாலும், அதற்குள் தங்களது தேடுதல் கப்பல்களைக் கொண்டுவந்து அந்த நிறுவனம் பணியைத் தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம்.

இந்தத் தேடுதல் வேட்டை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றாா் அவா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.

அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த விமான பாகங்களைத் தேடும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. ஆனால், எந்த விதத்திலும் விமான பாகங்கள் கண்டறியப்படாத நிலையில் கடந்த 2017 ஜனவரியில் தேடுதல் பணி கைவிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு தேடுதல் பணியை தொடங்கியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், புதிய தரவுகள் மற்றும் முன்பைவிட அதிநவீன தேடுதல் கப்பல்களின் உதவியுடன் எம்ஹெச்370 விமானத்தை தேடித் தர ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தற்போது முன்வந்துள்ளது.

4 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்று ஒப்படைப்பு: ஹமாஸ்

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். இது ... மேலும் பார்க்க

இலங்கை: போதைப்பொருள் கடத்தியதாக இந்தியப் பெண் கைது

இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக இந்தியாவைச் சோ்ந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 1.2 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா்

தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தாா். எனினும... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன.பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத... மேலும் பார்க்க

காஸாவின் எதிர்காலம் இது!நெதன்யாகுவுடன் மது அருந்தும் டிரம்ப்!

ரஷிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மது அருந்துவதைப் போன்ற செய்யறிவு (ஏஐ) தொழிநுட்ப விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. காஸாவை அமெரிக்கா கைப்பற்றவுள்ளதாக ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின்... மேலும் பார்க்க