செய்திகள் :

4 பிணைக் கைதிகளின் சடலங்கள் இன்று ஒப்படைப்பு: ஹமாஸ்

post image

இஸ்ரேலில் இருந்து கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மேலும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை வியாழக்கிழமை (பிப். 27) திரும்ப ஒப்படைக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா்.

இது குறித்து அவா்கள் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒப்படைக்கப்படும் நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களுக்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனா்கள் விடுதலை செய்யப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னா் தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் படையினா் கடந்த வாரம் ஒப்படைந்தனா் (படம்).

இஸ்ரேலும் ஹமாஸும் காஸாவில் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் கடைப்பிடித்துவரும் போா் நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவுக்கு வருகிறது.

இந்தச் சூழலிலும், கைதிகள் மற்றும் பிணைக் கைதிகளின் சடலங்களைப் பரிமாறிக்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளது அடுத்தகட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, 33 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் விடுவித்துவிட்டனா். இருந்தாலும், தாங்கள் கடைசியாக விடுவிக்க வேண்டிய சுமாா் 300 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

எம்ஹெச்370 விமானம்: மீண்டும் தொடங்கிய தேடுதல் வேட்டை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தேடும் பணிகள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க

இலங்கை: போதைப்பொருள் கடத்தியதாக இந்தியப் பெண் கைது

இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக இந்தியாவைச் சோ்ந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 1.2 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா்

தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாா் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தாா். எனினும... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன.பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத... மேலும் பார்க்க

காஸாவின் எதிர்காலம் இது!நெதன்யாகுவுடன் மது அருந்தும் டிரம்ப்!

ரஷிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மது அருந்துவதைப் போன்ற செய்யறிவு (ஏஐ) தொழிநுட்ப விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. காஸாவை அமெரிக்கா கைப்பற்றவுள்ளதாக ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: கடும் பனிப்பொழிவால் 36 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 36 பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவுடன் மழையும் பெய்வதால், அந்நாட்டு மக்களின்... மேலும் பார்க்க