செய்திகள் :

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

post image

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன.

நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் இந்தமுறை அரையிறுதிக்குத் தேர்வாகாமல் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (பிப்.24) நியூசிலாந்து, வங்கதேசம் விளையாடிய போட்டியில் ரசிகர் ஒருவர் நியூசி. வீரர் ரச்சின் ரவீந்திராவை கட்டியணைத்தார்.

ரச்சினை கட்டியணைத்த நபர்.

அவரைக் கைது செய்த காவல்துறையினர் இனிமேல் அவர் பாகிஸ்தானில் எந்த ஒரு திடலிலும் கிரிக்கெட் போட்டியை பார்க்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்

இந்நிலையில் இந்தச் சம்பவத்தை அடுத்து பிசிபி நிறுவனம் கூறியதாவது:

நேற்றையப் போட்டியில் நடந்த விஷயத்தை பிசிபி முக்கியமாக எடுத்துக்கொள்கிறது. வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முதன்மையானது. பொறுப்பான நிறுவனமாகிய நாங்கள் உள்ளூர் பாதுகாப்பு முகமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

இனிமேல் போட்டி நடைபெறும்போது திடலுக்கு அருகில் பாதுகாப்பு வீரர்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவார்கள்.

வாழ்நாள் தடை

அந்தப் போட்டியில் அத்துமீறி உள்நுழைந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து கிரிக்கெட் திடலுலும் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என பிசிபி தெரிவித்துள்ளது.

இதுமாதிரி போட்டியின் நடுவே திடலில் ரசிகர்கள் உள்நுழைவது சாதரணமானதுதான். ஏற்கனவே பாகிஸ்தானில் 1996 உலகக் கோப்பையிலும் இதுபோல் நடந்தது.

ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி துபையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதா... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க