செய்திகள் :

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

post image

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்திற்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கிவரும் அரசு உறைவிடப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி விடுதி அறையிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

பொதுத்தேர்வில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பிறகு விடுதி அறையில் மகப்பேறு நடந்துள்ளது. பின்னர் விடுதியில் இருந்து, குழந்தையும் மாணவியும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசியதாவது,

''பெண்கள் விடுதியில் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மாணவி கருவுற்றது எப்படி என்பது தெரியவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் வாரம்தோறும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார்கள். இது சுகாதாரப் பணியாளர்களின் கவனக் குறைவு.

மாணவியும் குழந்தையும் சித்திரகொண்டா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மல்கன்கிரி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாணவி கருவுற்றதற்கு காரணமான நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.

விடுமுறையில் வீட்டிற்குச் சென்றபோது மாணவி கருவுற்றிருக்கலாம் என மாவட்ட நலத் துறை அலுவலகர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்! -சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ஒரேயொரு பொதுத்தேர்வுக்குப் பதிலாக இனி 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ... மேலும் பார்க்க

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க