செய்திகள் :

ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

post image

குவாஹாட்டி: அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ஆனது ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அசாம் வர்த்தக உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று மாநில அரசுக்கும் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இது தவிர, மாநில அரசுக்கும் மாதேசன் ஹைட்ரஜன் எல்விடி லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ரூ.1,500 கோடி ஹைட்ரஜன் மற்றும் நீராவி உற்பத்தி ஆலையை அமைக்க தயாராக உள்ளது. அதே வேளையில் மாநில அரசு குளோபல் ஹெல்த் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய சர்மா, மேலும் ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்றார். 'அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு' திட்டத்தின் முதல் நாளில் 15 துறைகளில் உள்ள நிறுவனங்களுடன் மொத்தம் 164 முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின.

இதையும் படிக்க: வணிகக் கடனளிப்பை இரட்டிப்பாக்க சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் திட்டம்

ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

சென்னை: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.ஜூலை 2023ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, ஸ்டார்... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸ்: பங்குச் சந்தை சரிவால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஹரியாணாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கிய மாருதி சுசூகி!

புதுதில்லி: உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா, ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.இந்த வசதிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி... மேலும் பார்க்க

அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

குவாஹாட்டி: அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று அறிவித்தார்.அட்வா... மேலும் பார்க்க

பிளிங்கிட் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி அளிக்கும் சொமாட்டோ!

பிளிங்கிட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதன் தாய் நிறுவனமான சொமாட்டோ ரூ. 1,500 கோடி வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனப் பதிவுக்கான ஒழுங்குமுறை தாக்கல் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்க உத்திகளுக்காக பிளிங்கிட... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தைக்கு நாளை (பிப். 26) விடுமுறை! ஏன்?

மகா சிவராத்திரியையொட்டி இந்திய பங்குச் சந்தை வணிகம் நாளை (பிப். 26) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க