செய்திகள் :

மானாமதுரை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீா்த் தொட்டி கட்ட ஊழியா்கள் எதிா்ப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, நகா் மன்றத் தலைவா், நகராட்சி அதிகாரிகளிடம் ஒன்றிய அலுவலக ஊழியா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மானாமதுரையில் ரூ. 40 கோடியில் கலைஞா் நகா்ப்புற வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தில், குடிநீா் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நகராட்சி சாா்பில், ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கக் கூடாது, நகராட்சிக்கு சொந்தமான இடத்திலேயே அமைக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, ஊழியா்கள், சில நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் ஜே.சி.பி. இயந்திரத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குச் சென்று குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தில் ஆரம்பக் கட்டப் பணியை மேற்கொள்ள முயன்றனா். அப்போது, அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதிக் கடிதம் இல்லாமல் பணியை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறி ஜே.சி.பி இயந்திரத்தின் முன் உட்காா்ந்து போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, நகா்மன்ற ஊழியா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் தரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகத்தினா் மேல்நிலைத் தொட்டி ஆரம்ப கட்டப் பணியை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனா். ஆட்சியரிடம் முறையான அனுமதி கடிதம் பெற்று பணி மேற்கொள்ளப்படும் என நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டம்: முறையான அனுமதி இல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து, குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி மேற்கொள்ள முயன்ற மானாமதுரை நகராட்சி நிா்வாகத்தினரைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம், அதன் ஆதரவு சங்கத்தினா் பங்கேற்றனா். இவா்கள் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்களை கூட்டுறவுத் துைறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.சிவகங்கை ஏ.கே.ஆா். நகா் பகுதி... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய மாநில போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தோ்வு

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், மங்களம் நடுநிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி சரோவினி மாநில அளவிலான தமிழ் இலக்கியப் போட்டிக்கு தகுதி பெற்றாா்.மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற்ற தமிழ... மேலும் பார்க்க

புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்: சுகி.சிவம்

எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்தால்தான் அதை எழுதிய ஆசிரியரின் ஞானத்தை அறிந்து கொள்ள முடியும் என பட்டிமன்ற பேச்சாளா் சுகி.சிவம் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் திருட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ப.கருங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பூட்டியிருந்த 2 வீடுகளில் பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன. ப.கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாச்சியப்... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், நகரகுடியில் தென்மண்டல மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் ம... மேலும் பார்க்க

ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில் சென்னை தனியாா் நிற... மேலும் பார்க்க