செய்திகள் :

இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

post image

இந்திய அணியின் பி டீமை வீழ்த்துவதும் பாகிஸ்தானுக்கு கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்துக்காக மனித கால்குலேட்டராக மாறிய அக்‌ஷர் படேல்!

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணி தற்போதுள்ள ஃபார்மில் இந்தியாவின் பி டீமை வீழ்த்துவதும் மிகவும் கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணி தற்போது உள்ள ஃபார்மில் இந்தியாவின் பி டீமிடம் வெற்றி பெறுவதும் மிகவும் கடினம். இந்தியா சி டீமை வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா? என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் அணியில் கூடுதலாக நிறைய வீரர்கள் இல்லாததது ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தானின் உள்ளூர் போட்டிகள் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடர்ந்து நடைபெறும் போதிலும், அந்த அணியால் தேசிய அணிக்கான தரமான வீரர்களை உருவாக்க முடியவில்லை.

இதையும் படிக்க: இந்த பாக். அணியை தோனியே வழிநடத்தினாலும் ஒன்றும் செய்யமுடியாது..!

இந்திய அணி எப்படி இத்தனை இளம் வீரர்களை உருவாக்கியுள்ளது. அதற்கு காரணம் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர். ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் அங்கிருந்து ரஞ்சி போட்டிகளில் விளையாடுகின்றனர். அதன் பின், அவர்கள் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடுகிறார்கள். இதனை பாகிஸ்தான் அணி ஆராய்ந்து தரமான வீரர்கள் அணியில் இடம்பெறாததற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளரை அந்த அணி நிர்வாகம் இன்று (பிப்ரவரி 25) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.-தெ.ஆ. போட்டி ரத்து!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸி. தெ.ஆ. போட்டி மழையினால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த 7ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி... மேலும் பார்க்க

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ... மேலும் பார்க்க