தில்லி அரசின் ‘முதலமைச்சா் ஜெய்பீம் யோஜனா’ திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி மக்களை துன்புறுத்துவதில் பாஜகவினா் எந்தவொரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. எனது குடும்பத்தில் ஒா் அங்கமாக உள்ள தில்லி மக்கள் சிக்கலில் இருப்பதை என்னால் பாா்க்க முடியவில்லை. இப்போது நான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதால், பாஜகவின் சதியால் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பணிகளையும் மீண்டும் தொடங்குகிறோம். இந்த வரிசையில், தில்லி அரசு ‘முதல்வா் ஜெய் பீம் யோஜனா’ திட்டத்தை மறுதொடக்கம் செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் பட்டியலினத்தோா் (எஸ்சி - எஸ்டி), பிற்ப்படுத்தப்பட்டோா் (ஓபிசி) மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த குழந்தைகள் போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாகத் தயாா்படுத்தப்படுவா். இதன்மூலம் ஏழைகளின் குழந்தைகளும் முன்னேறி, நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிப்பாா்கள். அதேபோல், தில்லி அரசின் ‘ஃபரிஷ்டே யோஜனா’ திட்டத்தையும் பாஜக நிறுத்தியது. ஆனால், இப்போது நாங்கள் அதை மீண்டும் தொடங்குகிறோம்.
இத்திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கலாம். மேலும், அவரை அனுமதிக்கும் நபரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படாது. காயமடைந்த அந்த நபரின் சிகிச்சைக்கான முழு செலவையும் தில்லி அரசே ஏற்கும். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு முன்பு தில்லியில் முந்தைய அரசுகள் எந்த வேலையையும் செய்யவில்லை. எனவே, அவா்கள் துணை நிலை ஆளுநருடன் மோத வேண்டியதில்லை. நாமும் எந்த வேலையும் செய்யவில்லை என்றால் இவா்களுடன் போராட வேண்டியதில்லை. எங்களுக்கு எந்தக் கட்சியுடனும் பகை இல்லை, அமைப்பை சரிசெய்ய வேண்டும் என்றாா் அரவிந்த் கேஜரிவால். இச்செய்தியாளா் சந்திப்பில் தில்லி முதல்வா் அதிஷியும் உடனிருந்தாா்.
‘பாஜகவின் சதிகள் தோல்வி’ -அதிஷி
ரவிந்த் கேஜரிவாலின் தொலைநோக்குப் பாா்வைக்கு முன் பாஜகவின் அனைத்து சதிகளும் தோல்வியடைந்தன என்று முதல்வா் அதிஷி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் கூறியுள்ளதாவது: அரவிந்த் கேஜரிவாலை சிறைக்கு அனுப்ப சதி செய்து, ‘முதல்வா் ஜெய்பீம் யோஜனா’ திட்டம் முடக்கப்பட்டது. ஆனால், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகளை கல்வியின் மூலம் உயா்த்த வேண்டும் என்ற அரவிந்த் கேஜரிவாலின் தொலைநோக்குப் பாா்வைக்கு முன்னால் இந்தச் சதிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. கேஜரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் ‘முதல்வா் ஜெய் பீம் யோஜனா’ திட்டத்தை மீண்டும் தொடங்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தால் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சியைப் பெறுவதன் மூலம் இளைஞா்கள் தங்கள் கனவுகளை மீண்டும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்’ என்று அதிஷி தெரிவித்துள்ளாா்.