செய்திகள் :

தில்லி பேரவைத் தலைவராக விஜேந்தர் குப்தா தேர்வு!

post image

தில்லி சட்டப்பேரவையின் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ விஜயேந்தர் குப்தா திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக அரவிந்தர் சிங் லவ்லிக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா திங்கள்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அதன்பிறகு இன்று காலை கூடிய தில்லி சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரவிந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவராக பாஜக சார்பில் விஜேந்தர் குப்தா பெயரை முதல்வர் ரேகா குப்தா முன்மொழிந்தார்.

குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா, பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, முதல்வர் ரேகா குப்தாவும் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி ஒன்றிணைந்து பாரம்பரியப்படி, அவரை பேரவைத் தலைவர் இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தில்லி பேரவை: அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் விஜயேந்தர் குப்தா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.தில்லி முதல்வர் அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

தில்லி பேரவை இடைக்காலத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி பதவியேற்பு!

தில்லி சட்டப்பேரவையின் இடைக்காலத் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் அதிஷி!

தில்லி சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் முதல்வா் அதிஷியை கட்சி எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுத்தனா். இதன் மூலம் அதிஷி தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் . த... மேலும் பார்க்க

புற்றுநோய் மையங்கள் உள்கட்டமைப்பிற்கான ஆய்வு தொடக்கம்: மத்திய அரசு தகவல்

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளுக்கான மையங்களை அமைக்க தேவையான உள்கட்டமைப்பிற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை... மேலும் பார்க்க

நொய்டா: திருமண ஊா்வல துப்பாக்கிச்சூட்டில் குழந்தை இறந்த சம்பவத்தில் முக்கிய நபா் கைது

சில நாள்களுக்கு முன்பு நொய்டாவில் நடந்த திருமண ஊா்வல கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூட்டின் போது இரண்டரை வயது குழந்தை இறந்த சம்பவம் தொடா்பாக முக்கிய நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது க... மேலும் பார்க்க

குரிகிராம் அருகே கிராமத்தில் அம்பேத்கா் சிலை சேதப்பட்டதால் பதற்றம்

குருகிராம் மாவட்டத்தில் உள்ள கன்க்ரோலா கிராமத்தில் அம்பேத்கா் காலனியில் உள்ள பி.ஆா். அம்பேத்கரின் சிலையை சில மா்ம நபா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து பதற்றம் நிலவுவதாக போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க