செய்திகள் :

தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க: காங். எம்.பி. வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை விதிஎண் 377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கை: பல தசாப்தங்களாக, தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்கள் மத்திய அரசால் ஊக்குவிக்கப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பொறுப்பாகவும் தொலைநோக்குச் சிந்தனையுடனும் இருந்து வருகின்றன. இப்போது, எங்கள் வெற்றிக்காக நாங்கள் தண்டிக்கப்பட்டு வருகிறோம்.

தென் மாநிலங்கள் தொகுதிகளை இழக்காது என்று மத்திய உள்துறை அமைச்சா் கூறுகிறாா். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை மீதான முடக்கம் நீக்கப்பட்டால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய மாநிலங்களுக்கு விகிதாச்சாரமற்ற அரசியல் அதிகாரம் வெகுமதி அளிக்கப்படும்.

அதேவேளையில், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்கள் குரல்கள் பலவீனமடைவதை காண நேரிடும். இது தமிழ்நாட்டையும், ஒட்டுமொத்த தென்னகத்தையும் தேசிய முடிவெடுப்பதில் குறைந்த செல்வாக்குடன் அரசியல் ரீதியாக ஒதுக்கி வைக்கும் நிலையை உருவாக்கும். எங்கள் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு அழிக்கப்படும்போது தெற்கு அமைதியாக இருக்காது.

நியாயமான, வெளிப்படையான மற்றும் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறைக்கு குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆகவே, மத்திய அரசு உடனடியாக தொகுதி மறுவரையறையின் அடிப்படையை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் இரண்டாம் தர அரசியல் அமைப்புகளுக்குத் தள்ளப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்க வேண்டும் என்றாா் அவா்.

சுப்பராயன் கோரிக்கை: மக்களவையில் செவ்வாய்க்கிழமை திருப்பூா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் கே.சுப்பராயன் விதிஎண் 377-இன் கீழ் முன்வைத்த கோரிக்கை: 2026- க்கு பிறகு 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை செயல்முறையை ஒத்திவைக்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நியாயமின்மை பற்றி விவாதிக்க வேண்டும். அடுத்த பொதுத் தோ்தல் தொகுதி மறுவரையறை அடிப்படையில் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இந்தச் செயல்முறை 2026- ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறை பணியானது தென் மாநிலங்களான தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், தெலங்கானா, ஆந்திராஆகியவற்றில் இடங்களைக் குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும்.

எனவே, தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை 2026-க்கு அப்பால் 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன். மேலும், 1971-இன் விகிதாச்சார விகிதத்தை பராமரிக்கும் வகையில் அரசமைப்புச்சட்டத்தை திருத்த வேண்டும் என்றாா் அவா்.

அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும்: மக்களவையில் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தல்

அரக்கோணம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க வேண்டும் மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜெகத்ரட்சகன் வலியுறுத்தினாா். இது தொடா்பாக மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில்வே துறையின் மானியக... மேலும் பார்க்க

எம்சிடி பட்ஜெட்டில் வடிகால்களை தூா்வாா்வதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு? சத் பூஜை வசதிக்கு ரூ.50 லட்சம்

தில்லியில் சத் பூஜை மற்றும் பிற பண்டிகைகளின் போது வசதிகளை வழங்குவதற்காக ரூ.50 லட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், மழைநீா் வடிகால்களை தூா்வார ரூ.2 கோடி கூடுதலாக மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கீட... மேலும் பார்க்க

ஷிவ் விஹாா் பகுதியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா் பகுதியில் 18 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

லண்டனில் சிம்பொனி இசை: தில்லியில் இளையராஜாவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

லண்டனில் அண்மையில் சிம்பொனி வேலியன்ட் இசை நிகழ்ச்சியை நடத்தியதற்காக பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இயைராஜாவை தில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய சிஇஓ பொறுப்பேற்பு

நமது சிறப்பு நிருபா்மத்திய அறிவியில் தொழில் நுட்பத்துறையின் கீழ் உள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏஎன்ஆா்எஃப்)தலைமைச்செயல் அதிகாரியாக டாக்டா் சிவக்குமாா் கல்யாணராமன் பொறுப்பேற்றாா். இவா் ச... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7.06 லட்சம் கோடி!

நமது நிருபா் இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்கு... மேலும் பார்க்க