செய்திகள் :

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை!

post image

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது போன்ற தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை ஒட்டி அனைத்து துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டால் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும்.

இந்த நிலையில் கோவை புதூர் தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய தீயனைப்பு அலுவலர் மார்ட்டின், சிறப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இன்று காலை பேரூர் பெரிய குளத்தில் வெள்ளத்தில் சிக்கி அவர்களை மீட்பது போன்று ஒத்திகை நடத்தினர். தற்போது குளத்திற்குள் சிக்கித் தவித்த வரை தனியார் பரிசல் உதவியுடன் சென்று மீட்பது எப்படி? என்று பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். அதேபோன்று லைவ் ஜாக்கெட், கயிறு மூலமும் மீட்புப் பணிகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.

அவசர நேரத்தில், தெர்மாகோல் மற்றும் காலி தண்ணீர் வாலி உதவியுடன் வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீண்டு வருவது எப்படி? என்பது குறித்தும் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடத்திக் காட்டினர். இதை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பார்த்தனர். இதற்கு இடையே கோவை மண்டலத்தில் உள்ள 17 கிளை போக்குவரத்து பணி மனைகள் மூலம் இயக்கப்படும் 949 பேருந்துகள் மழைக் காலங்களில் ஒழுகாமல் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்கும் வகையில் அனைத்து பராமரிப்பு பணிகளுக்கும் உத்தரவு விடப்பட்டு உள்ளது.

ஒரு வாரமாக இந்த பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் அனைத்து பேருந்துகளிலும் தேவையான மழைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி திவ்யா(30). ஆட்டோ ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய... மேலும் பார்க்க

கோவை, நீலகிரியில் 2 நாள்களுக்கு மிக கனமழை: வானிலை மையம்

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மத்தியில் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போதுரை வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக க... மேலும் பார்க்க

'அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை' - திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் திமுக... மேலும் பார்க்க