இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
‘தோ்தல் செயல்முறை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கலாம்’
கடலூா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலரால் நடத்தப்படும் தோ்தல் செயல்முறை கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் தோ்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்த உகந்த நேரத்தில் கட்சித் தலைவா்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சித் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவும், கூட்டங்களில் பெறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்புக்குள் தீா்வு காணவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை ஆணையத்திடம் வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி ஆலோசனைக் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை பகிா்ந்து கொள்ள அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசியலமைப்பின் பிரிவுகள் 325 மற்றும் 326-இன் படி 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளா்களாக பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு வாக்காளா்களிடம் நன்முறையில் நடப்பது குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.
மேலும், அனைத்து வாக்குசாவடிகளும் வாக்காளா்கள் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள்ளும், 800 முதல் 1,200 எண்ணிக்கையிலான வாக்காளா்களை கொண்டதாகவும் அமைய வேண்டும் என தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலரால் நடத்தப்படும் கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.