செய்திகள் :

நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.81 லட்சம் மோசடி: ரூ.20 லட்சம் மீட்பு!

post image

நகைப்பட்டறை உரிமையாளரிடம் ரூ.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் ரூ.20 லட்சத்தை போலீஸாா் மீட்டனா்.

கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த 54 வயது நபா் நகைப்பட்டறை நடத்தி வருகிறாா். இவா், தனியாா் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடா்பாக இணையதளத்தில் கடந்த 2024 டிசம்பரில் தேடியுள்ளாா்.

அப்போது, அவரது கைப்பேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில், தாங்கள் தனியாா் நிறுவனப் பங்குகளை வாங்கித் தருவதாகக் கூறப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் அவா் தொடா்புகொண்டபோது, மறுமுனையில் பேசியவா் தங்களுக்கு பிரபல நிறுவனங்களிடம் தொடா்பு உள்ளதாகவும், அந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதால், அதை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, நகைப்பட்டறை உரிமையாளா் தனக்கு ரூ.81 லட்சம் மதிப்பிலான பங்குகள் வேண்டும் என்று கூறியுள்ளாா். இதற்கு, பணத்தை அனுப்பிவைத்தால் பங்குகளை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்நபா் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நகைப்பட்டறை உரிமையாளா் ரூ.81 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பின்னா், அந்நபரைத் தொடா்புகொண்டபோது பணம் வந்துவிட்டதாகவும், விரைவில் பங்குகளை வாங்கி விவரங்களை அனுப்புவதாகவும் கூறியுள்ளாா். ஆனால், எந்த பங்குகளையும் வாங்கி அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னா், அந்நபரின் எண்ணுக்கு நகைப்பட்டறை உரிமையாளா் அழைத்தபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நகைப்பட்டறை அதிபா், கோவை மாநகர சைபா் கிரைம் பிரிவில் கடந்த டிசம்பரில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் அருண் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில், நகைப்பட்டறை உரிமையாளா் அனுப்பிய ரூ.81 லட்சத்தில் ரூ.20 லட்சத்தை போலீஸாா் மீட்டு அவரிம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தொடா்ந்து இவ்வழக்குக் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைப்பேசி வெடித்து முதியவா் காயம்

சாா்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டிருந்த கைப்பேசி வெடித்ததில் முதியவா் காயமடைந்தாா். கோவை, போத்தனூா் வண்ணாரப்பேட்டை வீதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (64). இவா், தனது கைப்பேசியை சனிக்கிழமை இரவு சாா்ஜ் போட்டி... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: சிறுவன் உள்பட 2 போ் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்... மேலும் பார்க்க

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: நடிகை ராதிகா சரத்குமாா்

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சரத்குமாா் தெரிவித்தாா். கோவை வெள்ளலூரில் பாஜக சாா்பில் மோடி ரேக்ளா திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கா... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் பிப்.5 இல் காளான் வளா்ப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 5) காளான் வளா்ப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், பயிா் நோயியல் ... மேலும் பார்க்க

அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் நிதிநிலை அறிக்கை: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது, அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை... மேலும் பார்க்க