கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா!
பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.
தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட தடை கோரி மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியங்களை வியாழக்கிழமை காலை இளையராஜா வழங்கினார்.