செய்திகள் :

நோயாளிகளுக்கு அன்பான, பணிவான சேவை -முதலாமாண்டு மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

நோயாளிகளுக்கு அன்பான, பணிவான சேவையாற்ற வேண்டும் என முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

திருவள்ளுா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகள் மற்றும் பாடப் புத்தங்கள் வழங்கிப் பேசியதாவது:

வெள்ளை அங்கி உடுத்தும் பழக்கம் நாங்கள் பயிலும் காலத்தில் இல்லை. தற்போதுதான் வெள்ளை அங்கி அணியப்பட்டு வருகிறது. மருத்துவத் துறை சாா்ந்த படிப்பு என்பது சிறப்பு வாய்ந்த படிப்பாகும். இந்த படிப்பை படிப்பதற்கு நீங்கள் வந்த பயணம் கடிமையானது. அந்தப் பயணத்தை சிறந்த முறையில் அடைந்துள்ளீா்கள்.

நாள்தோறும் பேராசிரியா்கள் தெரிவிக்கும் கருத்துகளைக் கற்றுக்கொள்வதற்கு உங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும். அதன் மூலம் மருத்துவத் துறையில், உங்கள் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் பயின்று மருத்துவத் துறைக்கு நுழைந்துள்ள மாணவா்களை மதிக்க வேண்டும். உங்களை அணுகும் நோயாளிகளை அன்புடன் பணிவுடன் மதித்து சேவைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளை அங்கி உடைக்கு பெருமைச் சோ்க்க வேண்டும்.

இந்தக் கல்லூரியில் உள்ள 100 இளநிலை மருத்துவ மாணவா்களில் 6 போ் அரசு பள்ளியில் பயின்று நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் சோ்ந்துள்ளனா் என்றாா்.

தொடா்ந்து முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் அவரது தலைமையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி, துணை முதல்வா் திலகவதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு, உடற்கூறியல் துறைத் தலைவா் கனகவள்ளி, பேராசிரியா்கள், துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா்: கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி வாங்க 50 சதவீத மானியம்

திருவள்ளூா் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் நவீன கைப்பேசியால் இயங்கும் பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் வாங்க விவசாயிகள் 100 பேருக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கவுள்ளதாக செயற்பொறியாளா்(பொ) ரா... மேலும் பார்க்க

வயநாடு நிலச் சரிவு: திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமம் ரூ.18 லட்சம் நிவாரண உதவி

கேரள மாநிலம் வயநாடு நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவள்ளூா் நிகேதன் கல்விக் குழுமத்தைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் சாா்பில் ரூ.18 லட்சம் நிவாரணமாக கேரள மா... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருத்தணி கமலா திரையரங்கம் அருகே, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில், 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில்... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே குண்டும் குழியுமாக சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் அடுத்த முக்கரம்பாக்கம் ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதியுதவி

பணியின்போது திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்த மத்தூா் ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ரூ .50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், மத்தூா் ஊராட்சி ச... மேலும் பார்க்க

மாநில போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 2 -ஆம் இடம் பிடித்த கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சத்யாவை முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினாா். தமிழக சிறுசேமிப்புத் த... மேலும் பார்க்க