செய்திகள் :

பச்சூரில் இருவழிப்பாதை: ஜோலாா்பேட்டை எம்எல்ஏ உறுதி

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பெற்றோா்-ஆசிரியா் சங்கத்தலைவா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயா சரவணன், அஸ்வினி தேசிங்குராஜா, மோகனவேல், உறுப்பினா் ஆனந்தன், ஜவகா், கபிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் கிறிஸ்டி பிரமிளா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு 89 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில்: பச்சூா் அரசினா் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து பச்சூா் வரை செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. விரைவில் இச்சாலையை இருவழிச் சாலையாக விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினாா். ஆசிரியா்கள் ரவி, செந்தில்குமாா் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 144 மாணவா்களுக்கு எம்எல்ஏ தேவராஜி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது : பிரேமலதா விஜயகாந்த்

ஆம்பூா்: தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கழமை தெரிவித்தாா். ஆம்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: நல உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல உதவிகளை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் தா்ப்ப... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை அருகே சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் போதைப் பொருள்களை ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளா்கள்,ஆய... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஆம்பூா்: ஆம்பூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வ... மேலும் பார்க்க

இணைய வழி குற்றங்கள்: விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சைபா் கிரைம் ஆய்வாளா் யுவராணி மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஆம்பூா் ரோட... மேலும் பார்க்க

நகைக் கடை அதிபா் தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நகைக் கடை அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் தினகரன்(48). வாணியம்பாடி சி.எல் சாலையில்... மேலும் பார்க்க