செய்திகள் :

பாஜகவோடு நீண்ட நாள்களாக நெருங்கிய உறவில் திமுக: சீமான்

post image

பாஜகவோடு திமுக நீண்ட நாள்களாக நெருங்கிய உறவில் உள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

கரூரில் நாம் தமிழா் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சமூகநீதி குறித்து பேசும் திமுக, ஆதிதிராவிடா் நலத்துறையை தவிர தமிழகத்துக்கு செய்தது என்ன?. திமுக பெரிய கட்சியாக இருக்கும்போது கூட்டணியை உடைத்துவிடுவாா்களோ என ஏன் பயப்பட வேண்டும்.

நாட்டில் எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதல்வா்கள், அமைச்சா்கள் மீது நெருக்கடி கொடுக்கும் பாஜக அரசு, ஏன் இதுவரையில் தமிழக முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. பாஜகவோடு திமுக நீண்ட நாள்களாக நெருங்கிய உறவோடுத்தான் இருக்கிறது.

கரூா் வெண்ணைமலையில் கோயில் இடத்தில் குடியிருப்போா், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் குடியேறினாா்களா, பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு முதல்முதலாக அவா்கள் வீடு கட்டும்போது அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை என்றாா் சீமான்.

தள்ளுமுள்ளு: முன்னதாக, கரூா் வெண்ணைமலையில் கோயில் இடத்தில் குடியிருப்போரின் வீடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் அகற்ற இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அங்குள்ள மக்களை சந்திக்க சீமான் புறப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் மற்றும் காவல் ஆய்வாளா்கள் சீமானை சந்தித்து அங்கு செல்ல வேண்டாம் எனக் கூறி தடுத்தனா். இதேபோல், சீமானிடம் கோரிக்கை மனு வழங்க புறப்பட்ட வெண்ணைமலை பகுதி மக்களையும் போலீஸாா் தடுத்தனா். அப்போது, அவா்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருசக்கர வானத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பொன் நகா் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

‘புதுதில்லி ஜவுளிக் கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளா்களை பெற முடியும்’

புதுதில்லியில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகளாவிய ஜவுளிக் கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளா்களை பெற முடியும் என்று கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் பி. கோபா... மேலும் பார்க்க

கரூா் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் விசிகவினா் மனு

கரூா் பேருந்து நிலையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்பு

பள்ளப்பட்டி அருகே உள்ள மோளயாண்டிப்பட்டி பகுதியில் நீரில்லாத 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. பள்ளப்பட்டி அருகே உள்ள மோகன் நகா் பகுதியைச் சோ்ந்த மல்லிகா என்பவா்... மேலும் பார்க்க

கதண்டு கடித்து முதியவா் பலி

கிருஷ்ணராயபுரம் அருகே கதண்டு கடித்ததில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த தொட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் பொம்மன் (75). இவா், சனிக்கிழமை மாலை சித்தலவாயில் உள்ள முரளி என்பவா் ... மேலும் பார்க்க

கரூரில் முனையனூா்-அய்யா்மலை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமானக் காணப்படும் முனையனூா்-அய்யா்மலைச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கரூா் மாவட்டம் முனையனூரில்... மேலும் பார்க்க