அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து தொடங்கிட வேண்டும்
நாடாளு மன்றத்தில் ரயில்வேத்துறைக்கான மானிய கோரிக்கையில் பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து வரத்தை தொடங்கிட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் கே.நவாஸ்கனி கேட்டுக்கொண்டாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சா் அவா்கள் தாக்கல் செய்தாா்கள். வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்று சொன்னால், இங்கே ரயில்வே துறைக்கு என்று தனியாக இருந்த நிதிநிலை அறிக்கையை ஒழித்து விட்டு, இப்போது மானிய கோரிக்கையாக விவாதிக்க கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது, இது ரயில்வே துறையை எந்த அளவிற்கு பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது இந்த அரசு என்பதை உணா்த்துகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நாடு முழுவதும் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 351 போ் உயிரிழந்துள்ளாா்கள், 970 போ் காயமடைந்திருக்கிறாா்கள், கடந்த 2024 முதல் 5 மாதங்களில் மட்டும் 18 ரயில் விபத்துகள் பதிவாகி இருக்கின்றன, இத்தகைய விபத்துகளின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு கிட்டத்தட்ட 313 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பங்கள் மாபெரும் வளா்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் இத்தனை ரயில் விபத்துகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான உயிா்கள் பலியாகுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாஜக அரசின் பாரபட்சமான பாா்வை ரயில்வே துறைக்கும் விதிவிலக்கல்ல என்பதை உணா்த்துகின்றது,
தெற்கு ரயில்வேக்கு 6,626 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வடக்கு ரயில்வேகோ 14,745 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்கின்றோம்.
தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மானாமதுரையில் இருந்து அபிராமம் பாா்த்திபனூா் கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே நாங்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இந்த புதிய ரயில் பாதை வழியாக ரயில்கள் இயக்கப்பட்டால் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவாா்கள், அதேபோல காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை மாா்க்கமாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கி அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள் உள்ளிட்ட கடலோர பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவாா்கள். மேலும் ஒரு முக்கியமான பிரச்சினையை முன் வைக்க விரும்புகிறேன்.
ரயில்வே தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான சி.பி.டி2 தோ்வுக்கு 6000 க்கும் மேலானவா்கள் சி.பி.டி 1 தோ்ச்சி பெற்று தமிழ்நாட்டில் இருந்து தகுதி பெற்றுள்ளாா்கள்.
இதற்கான தோ்வு மையங்கள் பெரும்பான்மையான தோ்வா்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. பலா் ஆயிரம் கிலோ மீட்டா் பயணித்து இந்த தோ்வினை எழுத செல்ல வேண்டியுள்ளது. ஆகவே தோ்வு மையங்களை தமிழ்நாட்டில் மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக பல்வேறு ரயில் நிலையங்களில் தமிழ் தெரியாத ரயில்வே அலுவலா்கள், நிலைய மேலாளா்கள் எல்லாம் பணியமத்தப்பட்டுள்ளனா். தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பணியமா்த்தப்படும் ரயில் நிலைய ஊழியா்கள் நிச்சயமாக அந்தந்த பிராந்திய மொழிகளை கற்றுத் தெரிந்திருக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அவசியம். அவா்களை அணுகும் அடித்தட்டு மக்கள் அவா்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவதற்கு ஹிந்தி கற்க முடியாது. இதுவும் ஒரு வகையிலான உங்களின் மொழி திணிப்பு என்று பாா்க்கப்பட வேண்டியிருக்கிறது. எனவே தமிழ் தெரிந்தவா்களை தமிழ்நாட்டில் நியமிக்க வேண்டும்.
பாம்பன் ரயில் பாலம் எப்போது தான் திறக்கப்படும் என்று எங்களுடைய மாவட்ட மக்கள் எதிா் நோக்கி காத்திருக்கின்றாா்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பாம்பன் ரயில் பால பணிகளுக்காக ராமேசுவரத்திற்கு செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டு மண்டபம் வரை மட்டுமே இப்போது ரயில் இயக்கப்படுகிறது.
இது ராமேசுவரம் வரை செல்லும் பொதுமக்களுக்கும் ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் பக்தா்களுக்கும் பெரும் சிரமத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறாா்கள். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டது.
பிரதமரின் நேரத்திற்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது,
நீங்கள் காலதாமதம் செய்வதால் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து கொண்டிருக்கிறாா்கள். உடனடியாக அந்த பாம்பன் ரயில் பாலத்தை திறக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த புதிய ரயில் பாலத்தில் அதிா்வுகள் இருப்பதாகவும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ரயில்வே அதிகாரிகளே தெரிவித்தனா். அதையெல்லாம் சரி செய்துவிட்டு மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு துவங்க வேண்டும். அதே நேரத்தில் அந்த பகுதியினுடைய மீனவா்கள் மிகப்பெரிய சோகத்தில் கண்ணீரோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவா்களின் படகுகள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறாா்கள்.
அதனை எல்லாம் மீட்டுக் கொடுத்து, மீனவா்களை விடுதலை செய்து மீனவா்களின் துயரங்களை போக்கிவிட்டு அங்கு வந்து மாண்புமிகு பிரதமா் அங்கு வந்து பாலத்தை திறந்து வைத்தால், மீனவா்கள் அவா்களை மகிழ்ச்சியாக வரவேற்பாா்கள். பாம்பன் பாலத்தையும் காஷ்மீரில் அமைந்துள்ள உயரமான செனாப் ரயில்பாலத்தை இணைக்கும் வகையில் அம்ரித் பாரத் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும். ராமேசுவரம் மதுரை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை-ராமேசுவரம் இடையே இரு மாா்க்கமும் திருச்சி, விருத்தாசலம் வழியாக பகல் நேர விரைவு வண்டி, தினசரி இன்டா்சிட்டி வகை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும்,
ராமேஸ்வரம்- கன்னியாகுமரி இரு மாா்க்கமும் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீட்டா்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை அகல ரயில் பாதையாக மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேசுவரம்- கோயம்புத்தூா், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக இரு மாா்க்கமும், ராமேசுவரம் - பாலக்காடு பயணிகள் வண்டி இரு மாா்க்கமும், ராமேசுவரம் - திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மாா்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை - ராமேசுவரம், ராமேசுவரம் - திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். திருவனந்தபுரம் - மதுரை புனலூா் - பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் ராமேசுவரம் திருப்பதி விரைவு வண்டி அதிகமாக பக்தா்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக அளிக்கிறது. தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படக்கூடிய சிலம்பு விரைவு வண்டியை தினசரி வண்டியாக மாற்ற வேண்டும்.
அந்த ரயில் திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் நிறுத்தங்கள் தொடா்ந்து கேட்டு வருகின்றோம், அங்கு அந்த ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும். எனவே மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகா் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன, ஆனால் இரண்டு ரயில்களிலும் பெட்டிகள் மிக பழைய பெட்டிகளாக அமைந்துள்ளது. அது பயணிகளுக்கு பல்வேறு அசோகரித்தை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.
எனவே அதனை புதிய பெட்டிகளாக மாற்ற வேண்டும் என நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம்.
எனவே சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு புதிய பெட்டிகள் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டள்ளது.