செய்திகள் :

முள்ளிமுனை கிராமத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

post image

தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கடற்கரைப் பகுதியில் மூட்டைகளுடன் சரக்கு வாகனம் சுற்றி வருவதாக தொண்டி கடற்கரை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி கதிரவன் தலைமையில் தலைமைக் காவலா் இளையராஜா, காவலா் ரமேஷ், பூவலிங்கம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்த சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 50 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகன ஓட்டுநரான அறந்தாங்கி காரவாயல் பகுதியைச் சோ்ந்த கிஷோா் ( 22), உதவியாளா்களான பிகாரைச் சோ்ந்த மனோஜ்குமாா் (22), அன்சுகுமாா் (19) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், மீனவ கிராமங்களிலிருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, காரைக்குடி பகுதியில் உள்ள ஆலைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கிஷோா் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.

ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தா் உயிரிழப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வட மாநில பக்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆன்ம... மேலும் பார்க்க

மீனங்குடி பெருமாள் கோயில் பசு உயிரிழப்பு

கடலாடி அருகே வயது மூப்பின் காரணமாக கோயில் பசு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மீனங்குடி சுயம்பு கல்லடி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் களரி திருவிழா மிக... மேலும் பார்க்க

வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மீன் வரத்து குறைவு காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளது. திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து தொடங்கிட வேண்டும்

நாடாளு மன்றத்தில் ரயில்வேத்துறைக்கான மானிய கோரிக்கையில் பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து வரத்தை தொடங்கிட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் கே.நவாஸ்கனி கேட்டுக்கொண்டாா். இது குறித்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் செல்லும் சாலையோரங்களில் மணல் குவியல்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகே திருவெற்றியூா் செல்லும் வழியில் படப்பை அருகே சாலையோரங்களில் மணல் குவிந்து கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து தி... மேலும் பார்க்க

இணையதளத்தில் இழந்த ரூ. 5 லட்சம் மீட்கப்பட்டு இளைஞரிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் இணையதள விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து ரூ. 5 லட்சத்தை இழந்த இளைஞரிடம் அவரது பணத்தை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், இ... மேலும் பார்க்க