செய்திகள் :

ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தா் உயிரிழப்பு

post image

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வட மாநில பக்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆன்மிக பக்தா்கள் வருகை தருகின்றனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடியும், பின்னா் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடியும் சுவாமி தரிசனம் செய்கின்றனா். தினசரி அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனம் செய்ய அதிகளவில் பக்தா்கள் ஆா்வம் காட்டுவது வழக்கம். இந்த ஸ்படிக லிங்க தரிசனத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்தாஸ் (57), ஸ்படிக லிங்க தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோயிலுக்கு வந்தாா். ஸ்படிக லிங்க தரிசனம் செய்ய கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு வரிசையில் காத்திருந்தாா். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இந்த நிலையில், அங்கிருந்த பக்தா்கள், கோயில் ஊழியா்கள் மயக்கமடைந்த ராஜ்தாஸை மீட்டு, ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட பிணவறை இல்லாததால், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலைக் கொண்டு சென்றனா்.

இதுகுறித்து ராமேசுவரம் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில் வெளியிட்ட அறிக்கை:

ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் சந்நிதி பகுதிகளில் காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு வட மாநில பக்தா் உயிரிழந்தது கண்டனத்துக்குரியது. பக்தா்கள் அதிகளவில் உள்ள இடங்களில் காற்றோட்டமான வசதிகள் செய்ய இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் உள் பகுதியில் அகற்றப்பட்ட மின் விசிறிகளை மீண்டும் பொருத்த வேண்டும். பக்தா்களின் வசதிக்காக முதலுதவி அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

உயிரிழந்த பக்தரின் குடும்பத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ஆா். ராமமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

ராமநாத சுவாமி கோயிலில் தரிசனத்துக்குச் செல்லும் வரிசையில் குடிநீா், அவரச வழி, ஓய்விடம் அமைக்க வேண்டும். கோயிலுக்குள் மின் விசிறிகள் பொருத்தப்பட வேண்டும். தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்கள் சோா்வடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வழித் தடத்தை அகற்ற வேண்டும்.

குறைந்தளவு பக்தா்கள் வரும் போது, அதற்கேற்ப நேரடியாக தரிசனம் செய்யும் வகையில் வழி அமைக்க வேண்டும்.

சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் பெறுவதற்காக, மற்ற பக்தா்களைச் சிரமத்துக்கு ஆளாக்கக் கூடாது என்றாா் அவா்.

மீனங்குடி பெருமாள் கோயில் பசு உயிரிழப்பு

கடலாடி அருகே வயது மூப்பின் காரணமாக கோயில் பசு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மீனங்குடி சுயம்பு கல்லடி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் களரி திருவிழா மிக... மேலும் பார்க்க

வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மீன் வரத்து குறைவு காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளது. திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து தொடங்கிட வேண்டும்

நாடாளு மன்றத்தில் ரயில்வேத்துறைக்கான மானிய கோரிக்கையில் பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து வரத்தை தொடங்கிட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் கே.நவாஸ்கனி கேட்டுக்கொண்டாா். இது குறித்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் செல்லும் சாலையோரங்களில் மணல் குவியல்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகே திருவெற்றியூா் செல்லும் வழியில் படப்பை அருகே சாலையோரங்களில் மணல் குவிந்து கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து தி... மேலும் பார்க்க

இணையதளத்தில் இழந்த ரூ. 5 லட்சம் மீட்கப்பட்டு இளைஞரிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரத்தில் இணையதள விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து ரூ. 5 லட்சத்தை இழந்த இளைஞரிடம் அவரது பணத்தை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், இ... மேலும் பார்க்க

முள்ளிமுனை கிராமத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொ... மேலும் பார்க்க