செய்திகள் :

இணையதளத்தில் இழந்த ரூ. 5 லட்சம் மீட்கப்பட்டு இளைஞரிடம் ஒப்படைப்பு

post image

ராமநாதபுரத்தில் இணையதள விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து ரூ. 5 லட்சத்தை இழந்த இளைஞரிடம் அவரது பணத்தை மீட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், இளமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பசுபதி. இவா் ‘கிரிப்டோ கரன்சி’ மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி, ரூ. 5 லட்சத்தை அதில் முதலீடு செய்தாா். இதன் பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், பசுபதி பணத்தை இணைய வழியில் பரிமாற்றம் செய்திருந்ததால், அவா் பரிமாற்றம் செய்ய வங்கிக் கணக்கு எண்ணை உடனடியாக முடக்கி, ரூ. 5 லட்சத்தையும் மீட்டனா்.

இதையடுத்து, அந்தப் பணத்தை பசுபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.

ராமேசுவரம் கோயிலில் வட மாநில பக்தா் உயிரிழப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வட மாநில பக்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆன்ம... மேலும் பார்க்க

மீனங்குடி பெருமாள் கோயில் பசு உயிரிழப்பு

கடலாடி அருகே வயது மூப்பின் காரணமாக கோயில் பசு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மீனங்குடி சுயம்பு கல்லடி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் களரி திருவிழா மிக... மேலும் பார்க்க

வரத்து குறைவால் மீன் விலை அதிகரிப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மீன் வரத்து குறைவு காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளது. திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து தொடங்கிட வேண்டும்

நாடாளு மன்றத்தில் ரயில்வேத்துறைக்கான மானிய கோரிக்கையில் பாம்பன் ரயில் பாலம் திறந்து போக்குவரத்து வரத்தை தொடங்கிட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினா் கே.நவாஸ்கனி கேட்டுக்கொண்டாா். இது குறித்... மேலும் பார்க்க

திருவெற்றியூா் செல்லும் சாலையோரங்களில் மணல் குவியல்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை அருகே திருவெற்றியூா் செல்லும் வழியில் படப்பை அருகே சாலையோரங்களில் மணல் குவிந்து கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து தி... மேலும் பார்க்க

முள்ளிமுனை கிராமத்தில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொ... மேலும் பார்க்க