செய்திகள் :

பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

post image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-ஆம் தேதி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுத் தலைவா் எம்.எம்.அப்துல் குத்தூஸ், ஆணையக் குழு உறுப்பினா்கள் வர உள்ளனா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணிக்கு சிறுபான்மையினா் நலனுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆணையக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள், சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசு நலத் திட்ட உதவிகள், குறைபாடுகள், கோரிக்கைகள், சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க