செய்திகள் :

பிஸ்மில்லா, பிஸ்மில்லா... பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!

post image

பெஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று கூறிக்கொண்டே முஸ்லிம் இளைஞர்களும் இந்தப் பகுதி மக்களும் காப்பாற்றியதாகத் தாக்குதலில் கணவனைப் பறிகொடுத்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சூழலில் அவர்கள் தனது சகோதரர்களாகவே தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர்.

அப்போது ஆயுதங்களுடன் இந்தப் பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் கர்நாடகத்தின் ஷிவமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் ராய் என்பவர் அவரது மனைவி பல்லவி மற்றும் மகனின் கண் முன்னே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள பல்லவி, தங்களையும் கொலை செய்யக் கோரி பயங்கரவாதிகளிடம் நானும் எனது மகனும் கோரினோம். ஆனால், அவர்கள் உங்களைக் கொல்ல மாட்டேன், மோடியிடம் போய் இதைச் சொல் என்று அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் குறித்து பேசிய பல்லவி, சம்பவத்தின்போது அந்த இடத்தில் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும் தாக்குதல் நடந்தபோது, இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினரும் ராணுவமும் வருவதற்கு முன்னதாகவே அப்பகுதி மக்கள் வந்து உதவினர். வாகனங்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத காரணத்தால், அவர்களின் குதிரைகளை சம்பவ இடத்துக்கு கொண்டுவந்தனர்.

மூன்று இளைஞர்கள் பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று கூறியபடியே எங்களைக் காப்பாற்றினார்கள். அவர்கள் அந்த சூழலில் எனது சகோதரர்களைப் போன்றே தெரிந்தார்கள்.

பின்னர் சம்பவ இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் வந்த பிறகு, மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் உதவியை கோரினர்” என்று பல்லவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பயங்கரவாத தாக்குதல்: திருமணமான 7 நாள்களில் கடற்படை அதிகாரி பலியான சோகம்!

பெஹல்காம்: 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்!

ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்.ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து!

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மிரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சொன்னது என்ன?

பெஹல்காம் தாக்குதல் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இரங்கல் தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ... மேலும் பார்க்க

பாஜகவின் வெறுப்பு அரசியலே பெஹல்காம் தாக்குதலுக்குக் காரணம்: சஞ்சய் ராவத்

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய சஞ்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது! - விராட் கோலி

பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவ... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு!

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கண... மேலும் பார்க்க