பாஜகவின் வெறுப்பு அரசியலே பெஹல்காம் தாக்குதலுக்குக் காரணம்: சஞ்சய் ராவத்
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களுடன் பேசிய சஞ்சய் ராவத்,
அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
தெற்கு காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் கர்நாடகம், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர், 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு ஆமிரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.