செய்திகள் :

பாஜகவின் வெறுப்பு அரசியலே பெஹல்காம் தாக்குதலுக்குக் காரணம்: சஞ்சய் ராவத்

post image

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களுடன் பேசிய சஞ்சய் ராவத்,

அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.

தெற்கு காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இறந்தவர்களில் கர்நாடகம், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர், 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு ஆமிரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.

பெஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!

பெஹல்காம் தாக்குதலில் பலியான இந்தூரைச் சேர்ந்த எல்ஐசி கிளை மேலாளரை மண்டியிடச் செய்து இஸ்லாமிய வாசகங்களை கூற பயங்கரவாதிகள் கட்டாயப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகர... மேலும் பார்க்க

பெஹல்காம்: 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்!

ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்.ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து!

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மிரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சொன்னது என்ன?

பெஹல்காம் தாக்குதல் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இரங்கல் தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது! - விராட் கோலி

பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவ... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு!

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கண... மேலும் பார்க்க