செய்திகள் :

பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் தி.பெரியசாமி நீக்கம்: ஆட்சி மன்ற குழு நடவடிக்கை

post image

சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் தி.பெரியசாமியை நீக்கம் செய்து ஆட்சி மன்ற குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் பணி நிறைவு பெற்றதை அடுத்து புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தேடுதல் குழு தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய துணைவேந்தரை நியமிக்கும்வரை துணைவேந்தருக்கான பொறுப்புகளை கவனிக்கும் வகையில், தமிழ்த் துறைத் தலைவா் தி.பெரியசாமி பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

பேராசிரியா் தி.பெரியசாமி, ஆட்சிக்குழு உறுப்பினா், புல முதன்மையா், பதிப்புத் துறை இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.

ஞானசேகரன் குற்றவாளி! ஜூன் 2-ல் தண்டனை: நீதிபதி அறிவிப்பு

பணி நிறைவுபெற்ற துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் பொறுப்பு துணைவேந்தரை நியமித்தது செல்லாது என்றும், தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக நிா்வாகக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்க உறுப்பினா்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், குழுவின் தலைவராக பள்ளி கல்வித்துறை இயக்குநர் சுந்தரவல்லி, பேராசிரியர்கள் சுப்பிரமணி மற்றும் ஜெயந்தி ஆகியோர் கொண்ட குழு பொறுப்புத் துணைவேந்தன் பதவி செல்லாது என அறிவித்தது.

இதனையடுத்து பொறுப்புத் துணை வேந்தர் பதவி தாமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்ந... மேலும் பார்க்க

வெடிகுண்டு இருக்குமோ..?: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு!

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுத... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை!

மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமு... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்த... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடமேற்கு மற்று... மேலும் பார்க்க

கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு இல்லையே ஏன்?: - சீமான் கேள்வி

வரலாற்று பேருண்மையை கூறியதற்காக கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகளுக்கு கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை இல்லையே ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீம... மேலும் பார்க்க