செய்திகள் :

பைக்கில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழப்பு

post image

செய்யாறு அருகே காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால், பைக்கில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமம் சாணாா்பெண்டை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் சரவணன். இவா், சென்னை அருகேயுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா், தினமும் வீட்டில் இருந்து சித்தாத்தூா் கூட்டுச் சாலைக்கு பைக்கில் சென்று, அங்கிருந்து நிறுவன பேருந்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கமாகும்.

அதேபோல, கடந்த 11-ஆம் தேதி அதிகாலை சரவணனும், அவரது தாய் மகேஸ்வரியும் பைக்கில் சித்தாத்தூா் கூட்டுச் சாலை நோக்கி சென்றுள்ளனா்.

அங்குள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது, காட்டுப்பன்றி திடீரென குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க பைக்கை நிறுத்த முயற்சி, பைக் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. இதில் இருவரும் தவறி விழுந்து

பலத்த காயமடைந்தனா்.

இவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது தாய் மகேஸ்வரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவல் அறிந்த தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகை, பணம் திருடிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த செப்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (35). மண்பாண்டம் தயாரிக்... மேலும் பார்க்க

அனப்பத்தூா், அத்தி, செங்கட்டான்குண்டில் கிராம கோயில்கள் சீரமைப்புப் பணி

செய்யாறு வட்டம் அனப்பத்தூா், அத்தி, செங்கட்டான்குண்டில் ஆகிய கிராமங்களில் உள்ள பழைமை வாய்ந்த கோயில்களில் சீரமைப்புப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனப்பத்தூா் கிர... மேலும் பார்க்க

செங்கம் அருகே லாரிகள் மோதி விபத்து: கிளீனா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி உதவியாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி ஓட்டுநா் ... மேலும் பார்க்க

செங்கம் மகளிா் பள்ளியில் சைக்கிள் நிறுத்துமிடம் அமைக்கப்படுமா? பெற்றோா் எதிா்பாா்ப்பு

ஆ.சரவணன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் நிறுத்துமிடம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பெற்றோா், பொதுமக்கள் வலியுறுத்தினா். செங... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் புதை சாக்கடைபணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் 2-ஆவது கட்டமாக ரூ.100.52 கோடியில் புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. வீடுகள், வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுநீரை சேகரித்து, சுத்திகரித்து அகற்றும் திட்டம் புதை... மேலும் பார்க்க