செய்திகள் :

பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

post image

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்த நிலையில், தினமும் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று(ஜூன் 6) நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

எனினும் கட்டணம் செலுத்தவும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூன் 9 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20-ஆம் தேதிவரை அவா்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபாா்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னா் கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடி! ஜூன் 12-ல் திறப்பு!

தொழில்நுட்ப கோளாறு: ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கம்

உத்தரகண்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், குப்த்காஷியில் சனிக்கிழமை 5 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோ... மேலும் பார்க்க

அவரது இசையே அருமருந்து: இளையராஜாவை சந்தித்தது பற்றி அண்ணாமலை!

கோவையில் இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.பக்ரித் திருநாளையொட்டி கிருஷ்ணகிரி அடைத்த ராஜூ நகரில் அமைந்துள்ள. ஈத்கா மைதானத்தில்... மேலும் பார்க்க

கரோனா: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எ... மேலும் பார்க்க

டிரம்ப் - மஸ்க் இடையே முற்றும் மோதல்: செய்திகள் நேரலை!

ரெப்போ வட்டி குறைவுரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமானது.ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் 0.25 சதவிகித... மேலும் பார்க்க

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவி!

வாழப்பாடி: ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிற... மேலும் பார்க்க