செய்திகள் :

மகாராஷ்டிரம்: 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை!

post image

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 ஆண்டுகளில் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி, அகோலா, புல்தனா, வாஷிம் மற்றும் யவாட்மல் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த ஜனவரி 2001-ம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரையிலான காலத்தில் சுமார் 21,219 விவசாயிகள் தற்கொலை செய்து பலியானதாக அமராவதி வருவாய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த அறிக்கையின்படி கடந்த 24 ஆண்டுகளில் அமராவதி - 5,395 (விவசாயிகள் பலி எண்ணிக்கை), அகோலா - 3,123, யவாத்மல் - 6,211, புல்தனா - 4,442 மற்றும் வாஷிம் - 2,048 விவசாயிகள் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டு (2025) ஜனவரியில் மட்டும் இந்த 5 மாவட்டங்களில் 80 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதில் யவாத்மால் - 34, அமரவதி, அகோலா, புல்தானா மாவட்டங்களில் தலா 10 பேரும் மற்றும் வாஷிம் - 7 பேரும் தற்கொலையால் பலியாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கையில் கடந்த 24 ஆண்டுகளில் தற்கொலை செய்து பலியான விவசாயிகளில் 9,970 வழக்குகள் அரசினால் வழங்கப்படும் இழப்பீடு பெறும் தகுதிவுள்ளதாகவும், 10,963 வழக்குகளில் இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 319 வழக்குகள் தற்போது நிலுவையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு விதிமுறைகளின் படி கடன் சுமை மற்றும் பயிர்கள் நாசமானது ஆகிய காரணங்களினால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வழக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுப்பூர், தௌபல் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த 4 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஷ்னுப்பூரின் நம்போல் பகுதியைச் சேர்ந... மேலும் பார்க்க

அண்ணா சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா சிலை சிலை மீது திமுக-பாஜக கொடியை இணைத்து போடப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்த நாள், நி... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: மீட்புப் பணியில் இலங்கை ராணுவம்!

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள 3 ராணுவப் படைகளை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் ஏராளமான மக்கள் கொல்... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை: 2 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு டாஸ்மாக் கடை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மழையூர் பக... மேலும் பார்க்க

தர்பூசணியில் ரசாயன விவகாரம்: உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவர் போஸ் சென்னையை கூடுதலாக க... மேலும் பார்க்க

மீன்பாடி வண்டி திருடர் கைது: 11 மீன்பாடி வண்டிகள் பறிமுதல்

சென்னையில் முதியவர்களை குறிவைத்து மீன் பாடி வண்டிகளைத் திருடிவந்த ஷேக் அய்யூப்(37) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 11 வண்டிகளை பறிமுதல் செய்தனர். மீன்பாடி வண்டிகளை திருடி விற்ற பணத்தில் ஆன... மேலும் பார்க்க