செய்திகள் :

மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் கைது!

post image

மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சியில் அதிரடி கைது நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்கள், 4 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் 2 தேடப்பட்ட குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு மற்றும் கிழக்கு இம்பால், காக்சிங் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பீபள் லிபரெஷன் ஆர்மி, யுனைடெட் பீபள்ஸ் பார்ட்டி ஆஃப் காங்லெய்பாக், காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் பார்டி ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த 6 கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், 7 செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கு இம்பால் மற்றும் தெங்னோபால் ஆகிய மாவட்டங்களில், மெத்தபெட்டமைன் மற்றும் யாபா மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதனைக் கடத்திய 4 கடத்தல்காரர்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தேடப்பட்ட குற்றவாளிகள் கைது!

தேசிய புலணாய்வு ஆணையம் விசாரிக்கும் வழக்கில் தேடப்பட்டு வந்த தௌபல் மாவட்டத்தின் தௌபால் பகாங்கோங் பகுதியைச் சேர்ந்த ரோஹித் சிங் (வயது 33) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அம்மாநிலம் முழுவது கும்பல் தாக்குதல்கள் உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த கொன்ஷாம் மன்காங் (25), என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்!

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!

சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்து டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு ரயில் நி... மேலும் பார்க்க

அதிகரிக்கும் போர்ப் பதற்றம்! அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மிகவும் பரபரப்பான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நட... மேலும் பார்க்க

தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு! கார்கே குற்றச்சாட்டு!

தொழிலாளர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதராகவும் பாஜக அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மே தினத்தையொட்டி, பெங்களூரில் தொழிலாளர் தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்... மேலும் பார்க்க

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: காக்னிசன்ட் அறிவிப்பு!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்த... மேலும் பார்க்க

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் தொழிலாளி உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில், இற... மேலும் பார்க்க

அங்கோலா அதிபர் இந்தியா வருகை!

அங்கோலா நாட்டின் அதிபர் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ... மேலும் பார்க்க