செய்திகள் :

தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!

post image

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் தொழிலாளி உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில்,

இறந்தவர் ஜராவுடா ஜாட் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(35) என அடையாளம் காணப்பட்டார். உள்ளூர் விவசாயி ஒருவரின் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர்.

முதற்கட்ட தகவலின்படி, ராஜேஷ் அதிகாலை 2 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த வயல்களில் குழாய்க் கிணறு வெட்டச் சென்றிருந்தார். காலையில், வயல்களுக்குச் சென்ற கிராம மக்கள் அவரது உடல் ஒரு மரத்தில் தொங்கியதைக் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அழைப்பு வந்த சிறிது நேரத்திலேயே காவல்துறை குழுக்கள், தடயவியல் பிரிவு மற்றும் இறந்தவரின் குடும்பத்தினருடன் சம்பவ இடத்தை அடைந்தனர்.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.

ராஜேஷ் கொலை செய்யப்பட்டதாகவும், தற்கொலை என்று காட்ட அவரது உடல் தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்.மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் (79), குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க

பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பிடுங்கி எறியப்படும்! - அமித் ஷா

நாட்டில் பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பிடுங்கி எறியப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!

சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்து டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு ரயில் நி... மேலும் பார்க்க

அதிகரிக்கும் போர்ப் பதற்றம்! அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மிகவும் பரபரப்பான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நட... மேலும் பார்க்க

தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு! கார்கே குற்றச்சாட்டு!

தொழிலாளர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதராகவும் பாஜக அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மே தினத்தையொட்டி, பெங்களூரில் தொழிலாளர் தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்... மேலும் பார்க்க

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: காக்னிசன்ட் அறிவிப்பு!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்த... மேலும் பார்க்க