செய்திகள் :

திமுகவை வீழ்த்த அம்மாவின் தொண்டர்கள் ஓரணியாக வேண்டும்: டிடிவி தினகரன்

post image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரே அணியில் சேருமாறு அமமுக செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே தினத்தையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிலாளர் தின பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது, அமமுக கட்சி, எப்போதும் யாரிடமும் மண்டியிடாமலும் சமரசம் செய்யாமலும், தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அமமுகவின் இலைக்கை அடையும்வரை தொடர்ந்து உறுதியாகச் செயல்படுவேன்.

தமிழகத்தை சித்ரவதை செய்து கொண்டிருக்கும் திமுக அரசை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றுசேர வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இணைந்திருக்கிறது. திமுக அரசை வீழ்த்துவதுதான் நமது தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். அதனைச் செய்யவே, 2021 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் தியாகங்கள் செய்யவும் அமமுக தயாராக இருந்தது.

ஆனால், அதனை சிலர் ஏற்றுக்கொள்ளாததால்தான், திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும்.

திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் கிடைப்பதற்கு, அனைவரும் ஒரே அணியில் சேர வேண்டும்.

அம்மா ஜெயலலிதாவின் ஆட்சி வேண்டுமென்றால், அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிக்க:டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

தனியார் வங்கியால் விவசாயி தற்கொலை! தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

விவசாயியின் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.சேலம் மாவட்டத்தில் விவசாயியான வடிவேலு என்பவர், தனியார் வங்க... மேலும் பார்க்க

மதுரை வந்த விஜய்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மதுரை: படப்பிடிப்புக்காக, சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, அவரது தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக திண்டுக்க... மேலும் பார்க்க

அட்சய திருதியை: தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை!

சென்னை : புதன்கிழமை அட்சய திருதியை நாள் என்பதால், ஏராளமானோர் சொத்துகள் வாங்கியதன் மூலம், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியிருக்கிறது.சொத்துகள் வாங்க - விற்க அதி... மேலும் பார்க்க

ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

பத்திரப் பதிவில் நேற்று (ஏப்.30) ஒரேநாளில் ரூ. 272 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த முக்கிய நாள்களில் தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் கூடுதல் டோக்கன்கள் ... மேலும் பார்க்க

3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: அதேசமயம்..!

தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்தி... மேலும் பார்க்க

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார்.... மேலும் பார்க்க