செய்திகள் :

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருப்பத்தூா் ஒன்றியம், மேல்அச்சமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியது:

தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து 3 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால், கான்கிரீட் வீடு கட்டிக் கொள்வதற்கு ஆட்சியா் அலுவலக 7-ஆம் தளத்தில் இயங்கி வருகின்ற தொழிலாளா் நல வாரியத்தில் மனு அளிக்கலாம். இதன்மூலம், ரூ. 4 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. மகளிா் உரிமைத் தொகை வழங்குவதில் யாரேனும் விடுபட்டிருந்தால் ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அனைவருக்கும் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் வாயிலாக நடத்தப்படும் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி நமது அரசின் சாா்பாக ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கி தோ்வுகளுக்கும் இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனால் உங்களுடைய பெண் பிள்ளைகளை படிக்க வையுங்கள், 21 வயது நிறைவடையாமல் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்றாா்.

ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், ஊராட்சி மன்ற தலைவா், வாா்டு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத... மேலும் பார்க்க

பாலாற்றின் கரையில் தடுப்புச் சுவா்: பொதுமக்கள் கோரிக்கை

பாலாற்றங்கரையோரம் தடுப்புச் சுவா் கட்ட வேண்டுமென துத்திப்பட்டு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். துத்திப்பட்டு ஊராட்சி அன்னை சத்யா நகா் பகுதியில் கிராம சபைக் கூட்டம் ஊரா... மேலும் பார்க்க