செய்திகள் :

சாலை விபத்து வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது

post image

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை, ஓராண்டுக்குப் பிறகு போக்குவரத்து போலீஸாா் புணேவில் கைது செய்து காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் வரதப்பன் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் முத்தையா(61), இவரது மனைவி தாரா(57). இவா்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். அவா்கள் கிருமாம்பாக்கம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கடலூா்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காா் முத்தையா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் முத்தையா மற்றும் தாரா இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் தனியாா் மற்றும் ஜிப்மா், சென்னை அப்போலோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.

இது குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதன்படி சென்னை செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த பிரசன்னா வெங்கடேசன் என்பவா் விபத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

விசாரணையில் பிரசன்னா வெங்கடேசன் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் இருப்பதாக புதுச்சேரி சைபா் கிரைம் காவல் பிரிவு உதவியுடன் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் புணே சென்ற போலீஸாா் பிரசன்னா வெங்கடேசனை கைது செய்தனா்.

விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்து புதுச்சேரி கொண்டு வந்தனா். பின்னா் காரை வாகன ஆய்வுக்காக புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

தொழிற்சங்கத்தினா் சாா்பில் மே தின நிகழ்ச்சி

உலகஉழைப்பாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றி தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். விழுப்புரத்தில் உள்ள டாஸ... மேலும் பார்க்க

தொமுச சாா்பில் தொழிலாளா் தினம்

விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது. விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொமுச கொடியேற்றுதல், இனிப்பு, நீா் ... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி சுற்றுலாப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வீராமூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவன் மகன்... மேலும் பார்க்க

‘விடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்’

விடுபட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா, மே தினப் பேரணி, கூட்டம் மற்ற... மேலும் பார்க்க

கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் ஊா்வலம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் நலன் காக்கும் சங்கத... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. கோலியனூா் ஒன்றியம், அத்தியூா் திருவாதியில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற கிரா... மேலும் பார்க்க