செய்திகள் :

ஐபிஎல் தொடரிலிருந்து சந்தீப் சர்மா விலகல்!

post image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

மும்பைக்கு எதிரான போட்டியில் களம்காணாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா தனது விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நடப்பு சீசனில் சந்தீப் சர்மா 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த சீசனில் சிறப்பான பந்துவீச்சாக 2 விக்கெட்டுகள் 21 ரன்களை கொடுத்திருந்தார்.

ராஜஸ்தான் அணி இந்த சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியதும் கவனிக்கத்தக்கது.

மிகவும் அனுபவமிக்க சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளரான இவருக்கு மாற்றாக யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என இதுவரை ராஜஸ்தான் நிர்வாகம் அறிவிக்கவில்லை.

இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் கூறியதாவது:

விரலில் ஏற்பட்ட காயத்தினால் இந்த சீசனிலிருந்து சந்தீப் சர்மா விலகுகிறார். கடைசி போட்டியிலேயே இந்தக் காயத்துடனே விளையாடி அவரது மனவலிமையைக் காட்டினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர் விரைவில் குணமாகி வரவேண்டுமென வாழ்த்துகிறது.

சந்தீப் சர்மாவுக்குப் பதிலாக மாற்று வீரரை விரைவில் அறிவிக்கும் எனக் கூறியுள்ளது.

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி: சன்ரைசர்ஸுக்கு 225 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; தோல்வியிலிருந்து மீளுமா?

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹ... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்க... மேலும் பார்க்க

நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் 5 முறை... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன்: அஜிங்க்யா ரஹானே

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இந்திய அணி வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே கடைசியாக கடந்த... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்..! 36 வயதில் ரஹானே நம்பிக்கை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார். இந்திய அணிகயில் கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்ட்டில் விளையாடிய அஜிங்க்யா ரஹானே... மேலும் பார்க்க