செய்திகள் :

Retro: ``கார்த்திக் சுப்புராஜ் அது மாதிரி கதை வெச்சிருக்காரு; அதை தான் முதல்ல சொன்னாரு!'' - சூர்யா

post image

சூர்யா நடித்திருக்கும் 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'Love, Laughter, War' என்ற மூன்று பகுதிகளிலும் சூர்யா தனது நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார்.

அதேபோல், பூஜா ஹெக்டே தனது 'ருக்மணி' கதாபாத்திரத்தின் மூலம் பலருக்கும் பேவரைட்டாகியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Retro Team
Retro Team

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவரும் திரைப்படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி விவாதித்து, அதை ஒரு காணொளியாக 'ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்' யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.

அந்த காணொளியில் சந்தோஷ் நாராயணன், "உங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டைப் பற்றி எந்த விஷயத்தையும் சிந்திக்காமல் எப்படியான படம் செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சூர்யா, "அப்படியொரு கதையைக் கார்த்திக் சுப்புராஜ் வைத்திருக்கிறார்.

அதைத்தான் முதலில் என்னிடம் சொன்னார். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நமக்காக ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்று நினைப்போம்.

Suriya
Suriya

மார்க்கெட் என்று சுற்றி இருக்கும் எந்தத் தடைகளைப் பற்றியும் சிந்திக்காமல் ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

என்னுடைய பல திரைப்படங்கள் பெரிய பட்ஜெட்டில் இல்லாமல்தான் எடுக்கப்பட்டவை. 'காக்க காக்க' படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல், இறுதியில் தாணு சாரிடம் அந்தப் படம் சென்றது.

அப்படியிருந்தும் 'உயிரின் உயிரே' பாடலை அந்தமான் பகுதிக்குச் சென்று படமாக்கினோம்" என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`ஸ்கிரிப்டை படித்த பா.ரஞ்சித், நானே..!’ - திரைப்படமாகும் பெருமாள் முருகனின் 'கூளமாதாரி' நாவல்

எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'கூளமாதாரி' நாவல் திரைப்படமாக உருவெடுக்கிறது. அவரது முக்கியமான நாவலான கூளமாதாரி சினிமாவாக மாற்றம் பெறுவது பற்றி பெருமாள் முருகனிடம் பேசினோம்.பா.ரஞ்சித்என்னுடைய தேர்வு அதுத... மேலும் பார்க்க

Kingdom: `இந்த மேதை யாரென..' - அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கிங்டம்' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'ஜெர்சி' பட இயக்குநர் கெளதம் டின்னனூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அன... மேலும் பார்க்க

``கட்டிட விழா நடந்தால் தான் எனக்கு திருமணம்; அதற்கு 9 வருடங்கள் ஆகிவிட்டது, ஒரு வழியா..'' - விஷால்

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் தெரிவித்திருக்கிறார்.பெப்சி அமைப்பு தொழிலாளர் தினத்தை (மே 1) நேற்று கொண்டாடி இருக்கின்றனர். இதில் நடிகர் ... மேலும் பார்க்க

Ajith: ``ஒரு குற்றவுணர்ச்சியால் தான் `நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தேன்!'' - அஜித் ஓப்பன் டாக்

அஜித் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடக... மேலும் பார்க்க

`பஞ்சதந்திரம் படத்த பார்த்திட்டுதான் தூங்குவேனு ராணுவ வீரர் சொன்னாரு' - கிரேஸி மோகன் பற்றி ஜெயராம்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய '... மேலும் பார்க்க

Ajith Kumar: ``கடனை அடைப்பதற்குதான் சினிமாவிற்கு வந்தேன்!'' - பகிர்கிறார் அஜித்

கடந்த திங்கட்கிழமை நடிகர் அஜித் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார். விருது பெற்ற கையோடு இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு பேட்டிகள் கொடுத்திருக்கிறார... மேலும் பார்க்க