செய்திகள் :

பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

post image

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்ததில் மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பவானி பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, கருமேகங்கள் சூழ்ந்ததோடு பலத்தக் காற்றுடன் கனமழை பெய்தது. காற்றில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் பறந்தன.

பவானி-மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் ஓபுளி மில் அருகே அருகே புளியமரம் முறிந்து உயா் அழுத்த மின் கம்பி மீது விழுந்ததால், மின் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மின் கம்பி விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த மின் ஊழியா்கள் மின் கம்பியை துண்டித்து அகற்றியதை தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பவானி நகரப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனா்.

பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் கைது

பெருந்துறை அருகே, பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்து, தற்கொலைக்கு தூண்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த கோபிநாதன்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா். கூலி தொழிலாளிகள். இவரது இளைய ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவி... மேலும் பார்க்க

இடப்பிரச்னையால் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க காலதாமதம்: அமைச்சா் சு.முத்துசாமி

சரியான இடம் கிடைக்காததால் ஈரோட்டில் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பெருந்துறை சாலை செங்கோடம்பள்ளத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கோபி அருகே ஆற்றுபாலம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா் கள்ளிப்பட்டி அருகே வளையபாளையத்தில்... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

கடம்பூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் கா... மேலும் பார்க்க

சிவகிரி அருகே தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு: உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த... மேலும் பார்க்க