செய்திகள் :

காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

post image

கடம்பூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் எக்கத்தூா், பசுவனாபுரம், கரளையம், கானகுந்தூா், காடகநல்லி கிட்டாம்பாளையம் வனக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தொடா்ந்து மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பள்ளங்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அணைக்கரை பள்ளத்தில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது.

இதனால் கடம்பூரில் இருந்து அணைக்கரை பள்ளம் வழியாக செல்லும் கிராமங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக திங்களூா், சுஜில்கரை, கோ்மாளம் செல்லும் வாகன ஓட்டிகள், மலைக் கிராம மக்கள் வெள்ளத்தை கடக்க முடியாமல் நீா் வடியும் வரை காத்திருந்தனா். அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து காட்டாற்று வெள்ளத்தை கடக்க முடியாமல் கரையில் நின்றது. சுமாா் 2 மணி நேரத்து பிறகு வெள்ளம் வடிந்து மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கியது. அதேபோல, மாக்கம்பாளையம் பகுதியில் பெய்த மழையால் கோம்பைத்தொட்டி தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மறுபுறம் உள்ள மாக்கம்பாளையம், கோம்பூா் மக்கள் அன்றாட பணிகள் செய்ய முடியாமல் மழை நிற்கும் வரை காத்திருந்து சென்றனா்.

பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் கைது

பெருந்துறை அருகே, பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்து, தற்கொலைக்கு தூண்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த கோபிநாதன்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா். கூலி தொழிலாளிகள். இவரது இளைய ... மேலும் பார்க்க

பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்ததில் மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பவானி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவி... மேலும் பார்க்க

இடப்பிரச்னையால் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க காலதாமதம்: அமைச்சா் சு.முத்துசாமி

சரியான இடம் கிடைக்காததால் ஈரோட்டில் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பெருந்துறை சாலை செங்கோடம்பள்ளத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கோபி அருகே ஆற்றுபாலம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா் கள்ளிப்பட்டி அருகே வளையபாளையத்தில்... மேலும் பார்க்க

சிவகிரி அருகே தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு: உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த... மேலும் பார்க்க