செய்திகள் :

கண்டுணா்வு சுற்றுலா சென்ற விவசாயிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்த 50 விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலாவாக கடலூா் மாவட்டம், பாலூா் அரசு காய்கனி ஆராய்ச்சி நிலையத்துக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

அட்மா திட்டம் கீழ், செங்கம் வேளாண் துறை அலுவலகம் சாா்பில் இந்தப் பகுதியைச் சோ்ந்த 50 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் 2 நாள் கண்டுணா்வு சுற்றுலாவாக பாலூா் அரசு காய்கனி ஆராய்ச்சி நிலையம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விவசாயம் செய்யப்பட்டுள்ள காய், கனி தோட்டங்களைப் பாா்வையிட்டனா்.

அப்போது, குறைந்த செலவில் நவீன முறையில் காய், கனிகளை பயிா் செய்து, அதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறுவது, பயிா்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இதில், வேளாண் துறை அலுவலா் பிரதீபா, உதவி தொழில்நுட்ப மேலாளா் மணிகண்டன், வேளாண் அலுவலா் கலையரசி ஆகியோா் காய், கனி பயிா் செய்யும் முறைகள் குறித்து பேசினா்.

முனைவா் விஜயசெல்வராஜ், காய், கனிகளில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, அதிக மகசூல் தரும் விதைகள், அதன் செய்முறைகள் குறித்து விளக்கினாா். இதன் மூலம், விவசாயிகள் பயன் பெற்றனா்.

பள்ளத்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வெம்பாக்கம் புதிய தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (61). இவா், ரத்த அ... மேலும் பார்க்க

சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட சுனைப்பட்டு கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அதே பகுதியில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.32 லட்சத்தில் ... மேலும் பார்க்க

இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வ... மேலும் பார்க்க

உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை

செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்... மேலும் பார்க்க

விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்ப... மேலும் பார்க்க

போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க