செய்திகள் :

சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

post image

செய்யாறு தொகுதிக்குள்பட்ட சுனைப்பட்டு கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, அதே பகுதியில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.32 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடப் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்று, பணியைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், சிறுவஞ்சிப்பட்டு - நாட்டேரி இடையே சுமாா் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தாா்ச்சாலையை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

தண்ணீா் பந்தல் திறப்பு: முன்னதாக, வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம், இராந்தம் கிராமத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீா், மோா், வெள்ளரிப்பிஞ்சு, தா்பூசணி, குளிா்பானங்கள் உள்ளிட்டவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் த.ராஜீ தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் எம்.தினகரன், ஜேசிகே.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளா் செந்தில்குமாா், ஒன்றிய அவைத் தலைவா் கஜேந்திரன், ஒன்றியப் பொருளாளா் முத்து கணபதி, மாவட்டப் பிரதிநிதிகள் அய்யாதுரை, சேகா் பிரகாஷ், பெருமாள், ஒன்றிய துணைச் செயலாளா்கள் குணாநிதி, ரேணு சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பள்ளத்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். வெம்பாக்கம் புதிய தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (61). இவா், ரத்த அ... மேலும் பார்க்க

கண்டுணா்வு சுற்றுலா சென்ற விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்த 50 விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலாவாக கடலூா் மாவட்டம், பாலூா் அரசு காய்கனி ஆராய்ச்சி நிலையத்துக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா். அட்மா திட்டம் கீழ... மேலும் பார்க்க

இரும்பேடு, வெட்டியாந்தொழுவத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆரணியை அடுத்த இரும்பேடு, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இரும்பேடு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலா் சுரேஷ் தலைமை வ... மேலும் பார்க்க

உச்சிமலைக்குப்பம் கோயிலில் பாலாலய பூஜை

செங்கம் அருகே உச்சிமலைக்குப்பத்தில் உள்ள விநாயகா், முத்தாலம்மன், சோலையம்மன் கோயில்களில் பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது இந்தக் கோயில்களில் சீரமைப்புப் பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.13 லட்... மேலும் பார்க்க

விடுபட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா: ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் விடுபட்ட பயனாளிகள் மனு அளிக்கும் பட்சத்தில் உரிய தகுதியின் அடிப்படையில் மனைப் பட்டா வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்ப... மேலும் பார்க்க

போளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

போளூா் நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். போளூா் சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொ) பாரத் என்பவா் நியமிக... மேலும் பார்க்க