செய்திகள் :

Pahalgam : ‘முஸ்லிம்கள், காஷ்மீரிகளுக்கு எதிராக வெறுப்பு...’ - கொல்லப்பட்ட வீரரின் மனைவி வேண்டுகோள்

post image

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு கடந்த மாதம்16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திருமண வரவேற்பும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஹனிமூன் திட்டத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார்.

ஆனால், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹிமான்ஷி நர்வால்
ஹிமான்ஷி நர்வால்

வினய் நர்வாலின் மரணமும், அவரின் சடலத்துக்கு அருகில் அவரின் மனைவி ஹிமான்ஷி நர்வால் அமர்ந்திருந்த புகைப்படமும் பெருமளவில் பகிரப்பட்டது.

இந்த நிலையில், வினய் நர்வாலின் 27-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கர்னாலின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஜக்மோகன் ஆனந்தும் கலந்துகொண்டார்.

`அவர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும்’

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷி நர்வால், ``என் கணவர் எப்போதும் நல்ல நினைவுகளுக்காக நினைவுகூறப்பட வேண்டும் எனவும், அவருக்காக முழு தேசமும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

என் கணவரின் மரணத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் திரும்புவதையும், அவர்கள் மீதான வெறுப்பையும் நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும்.

அதே நேரம் நிச்சயமாக, எங்களுக்கு நீதியும் வேண்டும். யார் தவறு செய்தார்களோ அவர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

"பிறகு எதற்கு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்?" - அன்பில் மகேஸ்க்கு வானதி சீனிவாசன் கேள்வி

கோவை சித்தாப்புதூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன தேவையோ அதைக் ... மேலும் பார்க்க

`அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கிறது' - அமெரிக்க செயலாளருடன் ராஜ்நாத் சிங் பேசியது என்ன?

பாகிஸ்தானுடனான போர் பதட்டத்துக்கு இடையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்ச... மேலும் பார்க்க

War: தொடரும் மரண ஓலங்கள்; ஒவ்வொரு போரிலும் பாதிக்கப்படும் எளிய மக்கள் - போர் ஏன் கூடாது? |Explained

"எங்களது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்திருக்கிறோம். ஏற்கனவே ரூ.1 கோடி வரை செலவு செய்திருக்கிறோம். பாகிஸ்தானிய தம்ப... மேலும் பார்க்க

விதிகளை மீறி விளம்பர பேனர்கள்; கட்டுப்பட மறுக்கும் அரசியல் பிரமுகர்கள் - வேதனையில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரியில் திறந்தவெளி அழகு சீர்குலைப்பு தடுப்புச் சட்டம், கடந்த 2000-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி பொது இடங்களில் அனுமதியின்றிபேனர்கள்மற்றும் கட்-அவுட்கள் வைப்பது தடை செய்யப்பட்ட... மேலும் பார்க்க

'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' - வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

கர்நாடகாவில் ஹூப்பள்ளி - ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக... மேலும் பார்க்க