செய்திகள் :

'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' - வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

post image

கர்நாடகாவில் ஹூப்பள்ளி - ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக்கும் பயணிகள் சீட்டில் டிரைவர் தொழுகை செய்கிறார்.

பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே சில பேருந்துகள், மற்ற வாகனங்கள் போய்கொண்டிருப்பது தெரிகிறது.

அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளோ, டிரைவருக்காகக் காத்திருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவைப் பயணி ஒருவர்தான் எடுத்துள்ளார்.

கர்நாடகா பஸ் டிரைவர் - வைரல் வீடியோ
கர்நாடகா பஸ் டிரைவர் - வைரல் வீடியோ

இந்த வீடியோ வைரலாக, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பொதுத்துறையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

அனைவருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றக் கூடிய உரிமை இருந்தாலும், அலுவலக நேரங்களில் இது செய்வது தவறு.

பயணிகள் எல்லாம் காத்திருக்க, சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு, தொழுகை செய்தது ஆட்சேபனைக்கக் கூடியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" - புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்

ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: "அதிகாரம் இருந்தும் திமுக செய்யவில்லை; ஆனால், மத்திய அரசு செய்கிறது" - ஓபிஎஸ்

நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அ... மேலும் பார்க்க

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், 'பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படு... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலைவர் கமல்ஹாசன்

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந... மேலும் பார்க்க

உக்ரைனுடன் ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா: 'நான் இல்லையென்றால், புதின்...' ரஷ்யாவை சாடும் ட்ரம்ப்

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பேசியுள்ளார். "புதினுக்கு முழு உக்ரைனுமே வேண்டும் என்று நினைக்கிறேன். நான் மட்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை எ... மேலும் பார்க்க