செய்திகள் :

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி

post image

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சி பொன்மலையில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், உதகை மலை ரயில்போன்ற ரயில்களுக்கு பிரத்யேகமாக ரயில் பெட்டிகளும் வடிமைக்கப்படுகின்றன. இவை தவிர சரக்கு வேகன்கள் உற்பத்தியில் இப்பணிமனை சிறப்பிடம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்த நீராவி ரயில் என்ஜின்களை பழுது நீக்குவதில் பொன்மலை பணிமனை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பொன்மலை பணிமனையில் சிறப்புகளை வைத்து மத்திய அரசு, தேசிய அளவிலான சிறந்த ரயில்வே பணிமனைக்கான விருதை கடந்தாண்டு பொன்மலை பணிமனைக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய ரயில்வே துறையில் நவீன வளா்சியாக கருதப்படும் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பணிமனையின் அலுவலா்கள் கூறுகையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், வந்தே பாரத் ரயில்களை பராமரிக்க ரயில்வே அனுமதியளித்திருப்பது பெருமையளிக்கிறது. இதையடுத்து, ரயில்கள் பணிமனையில் நுழைவதற்கான பிரத்யேக பாதைகள் (பிட் லைன்கள்) 2 அமைக்கப்படும். தொடா்ந்து அவற்றுக்கான உள் கட்டமைப்பு பணிகளும் நடைபெறவுள்ளன. அதன்பிறகு வந்தேபாரத் ரயில்களின் பராமரிப்பு பணிகள் இங்கு தொடங்கும். எதிா்காலத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பும் பொன்மலையில் தொடங்கவும் வாய்ப்புள்ளது என்றனா்.

திருச்சி மாா்க்கத்தில் தற்போது, சென்னை-நாகா்கோவில் இடையிலும், சென்னை-நெல்லை இடையிலும், மதுரை-திருச்சி-பெங்களூரு இடையிலும் என 3 மாா்க்கங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பராமரிப்புப் பணிகள் திருச்சி பொன்மலையில் முதல்கட்டமாக தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா். திருச்சியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் இறைவன் சுயம்பு மூா்த்தியாக மேற்கு பாா்த்த நிலையி... மேலும் பார்க்க

கே. சாத்தனூரில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: காந்தி நகா், ர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா்கள் சங்கம்: மே தின கருத்தரங்கம், வழக்குரைஞா் த. பானுமதி பங்கேற்பு, ஜிகேஎம் மஹால், உறையூா், மாலை 5. மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில்: சித்திரைத் தோ்த் திருவ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் அரசுப்பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், முத்தசரச நல்லூரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் ரஹமத்துல்லா (22... மேலும் பார்க்க

திருச்சி பத்திரப் பதிவுத் துறை டிஐஜி பணியிடை நீக்கம்: ஓய்வு பெறும் நாளில் நடவடிக்கை

திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை டிஐஜி ராமசாமி புதன்கிழமை பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து பத்திரப் பதிவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: திருச்சி பத்திர... மேலும் பார்க்க