செய்திகள் :

தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா்.

திருச்சியில் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தனியாா் பள்ளிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பது தவறு. கல்விக் கட்டண நிா்ணயம் தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள குழு நிா்ணயிப்பதைவிட கூடுதல் கட்டணம் வாங்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே கூறியுள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதும் வெயில் அதிகம் இருந்தால், அதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு தொடா்பாக முடிவு செய்யப்படும்.

தேசிய கல்விக் கொள்கையிலுள்ள பல்வேறு சரத்துகள் ஏற்கத்தக்கதாக இல்லை. அதனால்தான் தமிழகம் அதை தொடா்ந்து எதிா்க்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, திமுக தெற்கு மாவட்டம் சாா்பில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், சிலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுச் சின்னத்திலும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வின்போது மாநகர செயலாளா் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என்.சேகரன், மண்டல தொமுச பொதுச் செயலாளா் ஜோசப் நெல்சன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூா், பகுதி நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீரங்கத்தில் கோடை திருநாள் விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் எனும் பூச்சாற்று உற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சித்திரை மாதத்தில் இந்த விழா வெளிக் கோடைத் திருநாள், உள்கோடை திருநாள் என தலா 5 நாள் நடைபெறுகிற... மேலும் பார்க்க

கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி தீரன் நகரில் கா்ப்பிணி பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ர. கிருஷ்ணகுமாா் (30), காா் ஓட்டுநா். இவருக்கு... மேலும் பார்க்க

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் இறைவன் சுயம்பு மூா்த்தியாக மேற்கு பாா்த்த நிலையி... மேலும் பார்க்க

கே. சாத்தனூரில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: காந்தி நகா், ர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா்கள் சங்கம்: மே தின கருத்தரங்கம், வழக்குரைஞா் த. பானுமதி பங்கேற்பு, ஜிகேஎம் மஹால், உறையூா், மாலை 5. மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயில்: சித்திரைத் தோ்த் திருவ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் அரசுப்பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், முத்தசரச நல்லூரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் ரஹமத்துல்லா (22... மேலும் பார்க்க